Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
சாய்ந்தமருது பிரதேச செயலக திவிநெகும சமூக அபிவிருத்திப் பிரிவின் ஏற்பாட்டில் சர்வதேச எழுத்தறிவு தின விஷேட நிகழ்வும் வறிய மாணவர்களுக்கு சிசுதிரிய புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் நேற்று செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
திவிநெகும தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாகவும் திவிநெகும முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.றிபாயா, திவிநெகும முகாமையாளர்களான ஏ.ஆர்.எம்.பர்ஹான், எம்.எஸ்.எம்.மனாஸ், உதவி முகாமையாளர்களான எம்.யூ.ஹில்மி, ஏ.எம்.எம்.றியாத் மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, “எழுத்தறிவும் இஸ்லாமும்” எனும் தொனிப்பொருளில் மௌலவி கலிலுர் ரஹ்மான் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இதேவேளை,சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்குட்பட்ட வறிய மாணவர்கள் 17பேருக்கு திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவினால் சிசுதிரிய புலமைப்பரிசில்களும் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
4 hours ago
4 hours ago