2025 ஜூன் 23, திங்கட்கிழமை

'ஹரீஸின் வெற்றி மக்கள் வழங்கிய ஆணை'

Niroshini   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.எஸ்.எம்.முஜாஹித்,எம்.எஸ்.எம். ஹனீபா

நாடாளுமன்றத் தேர்தலில் கல்முனை தொகுதியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாரிய வெற்றியை ஈட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக எச்.எம்.எம்.ஹரீஸின் வெற்றியானது கல்முனை மக்கள் அவருக்கு வழங்கியுள்ள அதிஉயர் ஆணையாகவே பார்க்கப்படுகின்றது என சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலில் வெற்றியீட்டி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள எச்.எம்.எம்.ஹரீசுக்கு வாழ்த்து தெரிவித்து சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் வாழ்த்து செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

உங்களது இந்த பெரு வெற்றிக்காகவும் மக்கள் ஆணையை மீண்டுமொரு முறை நிரூபித்து சாதனை படைத்தமைக்காகவும் சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் தங்களுக்கு வாழ்த்துத்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

மக்கள் வழங்கிய இந்த ஆணையானது சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால அபிலாஷையாக இருந்து வருகின்ற தனியான உள்ளூராட்சி மன்ற கோரிக்கைக்கு ஒட்டுமொத்த கல்முனை மக்களும் வழங்கிய அங்கீகாரமாகவே நாம் இதனை கருதுகின்றோம்.

அத்துடன் சாய்ந்தமருது மக்கள் கோரி நிற்கின்ற உள்ளூராட்சி மன்றமானது தேர்தல் முடிந்த கையேடு நிறைவு செய்யப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் அளித்த பகிரங்க வாக்குறுதி இன்று ஒட்டுமொத்த கல்முனைத் தொகுதி மக்களாலும் ஏற்று கொள்ளபட்டுள்ளது.

இந்த வாக்குறுதிகளின் பின்னணியில் நாடாளுமன்ற உறுப்பினராகிய நீங்களே இருந்துள்ளீர்கள் என்பதையிட்டு நாம் பெருமிதம் கொள்கிறோம்.

இதேவேளை, கல்முனை பிராந்தியத்தின் பாரிய நகர அபிவிருத்திக்கு பொறுப்பு வாய்ந்த அதிகாரம் உங்களுக்கு கிடைக்கவும் பிரார்த்திக்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .