2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கல்முனையில் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்கும் காலஎல்லை நீடிப்பு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில்  சட்டவிரோத  ஆயுதங்களை ஒப்படைக்கும் காலஎல்லை  இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேசத்தில் புழக்கத்திலுள்ள சட்டவிரோத ஆயுதங்களை இம்மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் அப்பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் கோயில்களின் ஊடாக ஒப்படைக்குமாறு கல்முனை பொலிஸாரினால் கோரப்பட்டிருந்தது.

ஆயினும், குறிப்பிட்ட காலப்பகுதியில் இப்பிரதேசத்திலிருந்து ஒரு ஆயுதம் மாத்திரமே ஒப்படைக்கப்பட்டிருப்பதால், இதற்கான காலக்கெடு இம்மாதம் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என கல்முனை பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றப்பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.எம்.ஸதாத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .