2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நோய் நிர்ணய அட்டை

Super User   / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முதன் முறையாக நோய் நிர்ணய அட்டை இன்று புதன்கிழமை வழங்கப்பட்டது.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நோயாளர்களின் நலன் கருதி வைத்திய சாலையின் நிருவாகம்  நோயாளர்களுக்குகென இலத்திரனியல் நோய் நிர்ணய அட்டைகளை வழங்கியுள்ளது.

வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.றஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மப்பேற்று வைத்திய நிபுணர் எஸ்.எம்.ஹில்மி சாலிஹ் நோயாளிகளுக்கு நோய் நிர்ணய அட்டைகளை வழங்கி வைத்தார்.

இந்த அட்டையை வழங்குவதன் மூலம் நோயாளர்கள் கவனயீனமாக அட்டையை தவறவிட்டாலும் வைத்தியசாலையில் ஆவணம் பதிவாக இருக்கும் என அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.றஹ்மான் தமிழ்மிருக்கு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0

  • Smm. Nafar from Qatar Thursday, 14 October 2010 06:17 PM

    இவ்வாறன திட்டங்கள் அறிமுகபடுத்துவது மகிழ்ச்சியை தருகிறது. அது போல் நோயாளிகளையும் அன்போடு கவனிக்க வேண்டியதும் அவசியமாகும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .