Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நெயினாகாடு கிராமத்திலுள்ள செங்கப்படை ஆற்றுக்கு குறுக்காக றஹ்மானியா வீதிக்கு செல்லும் தற்காலிக மரப்பாலம் உடைந்து விழும் ஆபத்தான நிலையிலுள்ளதாக பிரதேச மக்கள் கலலை தெரிவிக்கின்றனர்.
சம்மாந்துறை நகரிலிருந்து 12 கி.மீற்றர் தூரத்திலுள்ள இக்கிராமத்தில் சுமார் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களின் போக்குவரத்துக்காக 30 வருடங்களுக்கு முன்பு தற்காலிகமாக மரப்பாலம் அமைக்கப்பட்டது.
ஒருவர் மட்டுமே பிரயாணம் செய்யக்கூடிய இப்பாலத்தின் ஊடாக தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயணிக்கின்றார்கள்.
ஆனால் தற்போது உடைந்து விழும் நிலையில் காணப்படுவதால் விவசாயிகள், மாணவர்கள், வியாபாரிகள், நோயாளிகள், கர்ப்பினித் தாய்மார்கள், முதியோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பட்டவர்களும் இப்பாலத்தின் ஊடாக பிரயாணம் செய்வதில் தினமும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகினறனர்.
மாணவர்கள், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்கள் ஆற்றினுள் விழுந்த சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
இவ்வாற்றினில் வெள்ளம் ஏற்படும் போது பாலத்தினுடாக போக்குவரத்து செய்யமுடியாமல் 5 கி.மீற்றர் தூரம் சுற்றிவர வேண்டியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பலமுறை உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லயென மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது நிரந்தர பாலத்தினை நிர்மாணிக்க நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என இக்கிராம மக்கள் கோரிக்கையினை விடுக்கின்றனர்.
19 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
54 minute ago