2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் பாதிப்பு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 07 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் கடல் கடுமையான கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
பாண்டிருப்பு, மருதமுனை, துறைநீலாவனை பகுதிகளில் கடல்நீர் உட்புகுந்தமையினால் மீன்படி படகுகள் சேதமடைந்துள்ளன. இதனால் மீனவர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

கடல் தொடர்ந்தும் பேரிரைச்சலுடன் காணப்படுகின்ற நிலையில்,  மீனவர்கள் தொடர்ந்தும் கடற்றொழிலின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் சுமார் 23 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .