2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கிராம சேவை உத்தியோஸ்தர்களுக்கிடையில் முகாமைத்துவ போட்டி

Super User   / 2010 நவம்பர் 08 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம சேவை உத்தியோஸ்தர்களுக்கிடையில் நடத்தப்பட்ட முகாமைத்துவ போட்டியில் சாய்ந்தமருது 10 ஆம் பிரிவு கிராம சேவை உத்தியோஸ்தர் ஏ.எம்.நிஸ்ரின் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு நாடளாவிய ரீதியில் நடாத்தி வரும் இம்முகாமைத்துவ போட்டியின் போது கிராம சேவை உத்தியோஸ்தர்களின் அலுவலகம், சுற்றுப்புற சூழல், மக்களுடனான தொடர்புகள், திருப்திகரமான சேவை வழங்குதல், வினைத்திறன் என்பவற்றை அடிப்படையாக வைத்தே பரிசீலனை நடத்தப்பட்டதாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

இப்போட்டியில் சாய்ந்தமருது 17 ஆம் பிரிவு கிராம சேவை உத்தியோஸ்தர் ஐ.எல்.ஹம்ஸா இரண்டாம் இடத்தையும், சாய்ந்தமருது 9 ஆம் பிரிவு கிராம சேவை உத்தியோஸ்தர் எம்.எம்.மாஹிர் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .