2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதியின் பதவியேற்பையொட்டி துவாப் பிரார்த்தனை

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 19 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வையொட்டி, கல்முனைக்குடி சமுர்த்தி வங்கி வலய அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட துவாப் பிரார்த்தனையும் மரநடுகை நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை காலை வங்கி வலய வளாகத்தில் நடைபெற்றது.


கல்முனைக்குடி சமுர்த்தி வங்கி வலய முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஐPம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


இதேவேளை, கல்முனை ஜும்ஆ பள்ளிவாசல்களிலும் ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டு துஆ பிரார்த்தனை நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .