2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

அட்டானைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக கலீலுல் ரஹ்மான் நியமணம்

Super User   / 2010 நவம்பர் 21 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டானைச்சேனை பிரதேச சபையின் புதிய உறுப்பினராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த மீராலெப்பை கலீலுல் ரஹ்மான் அண்மையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக் காரியாலயத்தில் இடம்பெற்ற பதவியேற்பு வைபவத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்சில், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.எம். உவைஸ், ஜமால் அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் நகூர்தம்பி,  பிரதிக் கல்விப் பணிப்பாளர் யூ.எம்.வாஹிட், முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர் பளீல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்த ஆப்தீன் தமீம் கட்சி மாறியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே மீராலெப்பை கலீலுல் ரஹ்மானை நியமிக்கும் படியும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் எம்.டி.ஹசன் அலி அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளருக்கு விடுத்திருந்த வேண்டுகோளின் அடிப்படையிலேயே புதிய உறுப்பினராக கலீல் நியமிக்கப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .