2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கல்முனையில் க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கான கணிதபாட கருத்தரங்கு

Menaka Mookandi   / 2010 நவம்பர் 23 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது பிரதேச செயலகம், கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சாய்ந்தமருது 11ஆம் பிரிவு கிராம அபிவிருத்தி சங்கம் ஆகியவற்றின் அனுசரணையில் க.பொ.த.சாதாரணதர மாணவர்களுக்கான முற்றிலும் கணினி மயப்படுத்தப்பட்ட கணிதபாட கருத்தரங்கொன்றை குயுளுவு FAST (Focus of Applied Studies Tecnology) அமைப்பு இன்று கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் ஒழுங்கு செய்திருந்தது.

கல்லூரி அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதயாக கலந்து கொண்டார். கணித பாடத்தினை யூ.கே.நஜீம் தொகுக்க எஸ்.எம்.எம்.மனாப் கணினி வடிவமைப்பு செய்துள்ளதுடன் ஏ.ஏ.ஜெஸ்லி ,ஏ.நஜீம் மற்றும் எஸ்.ஜலீல் ஆகியோர் நெறிப்படுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .