2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

வாய்க்கால்களில் மீன்கள் ஏராளம்

Super User   / 2010 நவம்பர் 25 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தின் வயற் பிரதேசங்களுக்கு அருகிலுள்ள வாய்க்கால்களில் வழமைக்கு மாறாக  மீன்கள் ஏராளமாகக் காணப்படுவதால், வீதியில் செல்லும் பொதுமக்கள் நீரில் இறங்கி அவற்றை ஆவலுடன் பிடித்து வரும் சுவாரியமான காட்சிகளை ஆங்காங்கே நமது கமராக்களில் பதிவு செய்துகொள்ள முடிந்தது.

கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டத்தில் மாலை மற்றும் இரவு வேளைகளில் தொடராக மழை பெய்து வருகிறது.

இதனால் ஏற்பட்ட நீர் பெருக்கம் காரணமாக ஆறு மற்றும் குளம் ஆகியவற்றிலிருந்த மீன்கள் வாய்க்கால்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதையடுத்தே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, சில பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


 


You May Also Like

  Comments - 0

  • Nafar Saturday, 27 November 2010 10:56 PM

    இப்படி எப்போதும் இருந்தால் மக்கள் தமக்கு தேவையான மீன்கள் தாமே பிடிப்பர்களே ..................

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .