Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2010 டிசெம்பர் 07 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
மக்கள் பிரதிநிதிகள், சமூக அமைப்புக்கள், தனியார் துறையினர் மற்றும் மகளிர் குழுக்களின் பங்களிப்பின்றி ஒரு பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சி என்பது சாத்தியமாகாது என்று ஆசியமன்றத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் சிசிர குமாரஸ்ரீ தெரிவித்தார்.
'சமூக வகைப்பொறுப்பும் பங்குபற்றலின் தொழில் நுட்பமும்' எனும் தலைப்பின் கீழ் வட மாகாண அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான மூன்று நாள் வதிவிடப்பயிற்சிப் பட்டறை சீகிரியாவிலுள்ள 'சீகிரிய உல்லாச விடுதியில்' இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்
ஆசியா மன்றமானது அரசாங்காத்துடன் இணைந்து வேலை செய்யும் ஒரு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமாகும். கொள்கை மறுசீரமைப்பு, சட்ட மறுசீரமைப்பு, உள்ளுராட்சி மன்றங்களைப் பலப்படுத்துதல் ஆகிய துறைகளில் உள்ளுராட்சி மன்றங்களுடன் இணைந்து கடந்த 10 வருடங்களாக இலங்கை முழுவதும் இம் மன்றம் சிறப்பாகப் பணியாற்றி வருகிறது.
ஆசிய மன்றமானது, தற்போது வடக்கு, கிழக்கு, தெற்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தனது செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
மேற்படி செயற்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாக ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றப் பிரதேசத்திலும் பொருத்தமான வியாபார சூழலை உருவாக்குவதாகும். தனியார் துறையினரும் ஏனைய பங்குதாரர்களும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பினை வழங்குவதை ஊக்குவிக்கின்றோம். இவற்றினூடாக, உள்ளுராட்சி மட்டம், மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்டத்தில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம். இந்த நிலையினை அடையும் போது நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், அரசியல் ஸ்திரத்தன்மையும் உறுதிப்படுத்தப்டும்.
மக்கள் பிரதிநிதிகள், சமூக அமைப்புக்கள், தனியார் துறையினர் மற்றும் மகளிர் குழுக்களின் பங்களிப்பின்றி பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகாது.
இந்தப் பயிற்சிப் பட்டறையினூடாக உள்ளுராட்சி மன்றங்களுக்கும், சமூக அமைப்புகளுக்கும் இடையிலான உறவினைக் கட்டியெழுப்ப முயற்சிக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், உள்ளுராட்சி மாகாண அமைச்சின் மேலதிகச் செயலாளர் டி.பி. கெட்டியாராச்சி, ஆசியா மன்றத்தின் சர்வதேச பயிற்றுவிப்பாளர் மேளா அக்கினோ, நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர்களான எஸ்.சி. சசிகரன், ரிஷாட் ஷெரீப், எம்.ஐ.எம். வலீத் மற்றும் நிகழ்சித் திட்ட உதவியாளர் ஏ.எம் சியாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago