2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வீடுகள்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 08 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ்,  இளைஞர் விவகார, திறன் அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையுடன் தேசிய இளைஞர் சேவை மன்றம் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் ஒரு இளைஞருக்கு வீடு அமைக்கும் வேலைதிட்டத்தை (துருனுசவிய) அமுல்படுத்தவுள்ளது.

2011ஆம் ஆண்டு இலங்கையின் இளைஞர்கள் ஆண்டாக கருப்பொருளாக கொண்டு இலங்கையிலுள்ள 332 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 332 வீடமைக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இளைஞர் சேவைமன்றத்தில் இளைஞராக பதிவு செய்யப்பட்ட அங்கத்தவர் ஒருவருக்கு ஒரு வீட்டை அமைப்பதற்காக ஒரு இலட்சம் ரூபாய் வீதம் ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் வழங்கப்படவுள்ளது.

இந்த வீடமைப்பானது 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டு 2011ஆம் ஆண்டு ஜுன் மாதம் முடிவடைய வேண்டும் என்பது தொடர்பான சுற்றுநிரூபம் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைவாக அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகங்களிலும் 20 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .