2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மாடுகளுக்கு உணவுத் தட்டுப்பாடு

Kogilavani   / 2011 பெப்ரவரி 08 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் அடை மழையினால் கால் நடைகளின் மேய்ச்சல் நிலங்கள் நீரில் மூழ்கியதையடுத்து கால் நடைகளுக்கான உணவுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால்,  இதுவரை உண்ணாத உணவான ஆற்று வாழையை  பரீட்சார்த்தமாக மாடுகளுக்கு கொடுத்துப்பார்க்கின்றனர்.

ஆரம்பத்தில் இவற்றை உண்பதற்கு சிரமப்பட்ட மாடுகள் வேறு உணவு இல்லாமையால் தற்போது ஓரளவுக்கு உண்பதாக உரிமையாளர் கூறினார்.

இவ் ஆற்றுவாழையை வழமையாக எருமை மாடுகளே உண்பது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .