2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

பிரசாரத்திற்கு முன் தொழுகை

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அரசியலை சாக்கடை என்று பெரும்பாலானோர் விமர்சிப்பதுண்டு. சட்டம், நீதி, ஒழுக்க விழுமியங்கள் மற்றும் சமய போதனைகளுக்கு முரணான வகையில் அரசியலோடு சம்பந்தப்பட்டவர்களில் ஒரு கூட்டத்தார் நடந்து கொள்வதால் - ஒட்டுமொத்தமாகவே அரசியல் என்பது சாக்கடையாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், இதற்கு விதிவிலக்கான அரசியல் நடவடிக்கைகளையும் நாம் ஆங்காங்கே காணத்தான் முடிகிறது. அந்த வகையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சிசபையொன்றுக்கான தேர்தலில் போட்டியிடும் மு.கா. வேட்பாளரொருவரும் அவரின் ஆதரவாளர்களும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்பாக தொழுகையில் ஈடுபட்டமையை அவதானிக்க முடிந்தது.

வன்முறை, போதைப்பழக்கங்களுக்கு தமது ஆதரவாளர்களைப் பழக்கும் வேட்பாளர்கள் மலிந்து காணப்படும் இன்றைய அரசியலில், மேற்படி வேட்பாளரின் இவ்வாறானதொரு நடவடிக்கை குறித்து மக்கள் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டனர்.

அரசியலில் வன்முறைகளுக்குப் பதிலாக, இவ்வாறான சமய ஒழுக்க விழுமியங்களில் தாமும் ஈடுபட்டு, தமது ஆதரவாளர்களையும் ஈடுபடுத்தும் அரசியல்வாதிகள் பாராட்டுக்குரியவர்கள் என்கின்றனர் மக்கள்

இவ்வாறானவர்களே மக்களின் தேர்வாக அமைய வேண்டும்.


You May Also Like

  Comments - 0

  • தாஸீம் Monday, 28 February 2011 12:16 AM

    தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கும் வரை அல்லாஹ்வை நினைத்துவிட்டு, பின்னர் எங்க வீதியில் விளக்கு எரியல்ல என்று கம்லைன் கொடுத்தா...
    நான் பிசி... என்ற பதில தவிர வேறொண்ணும் வாரதில்ல. இவர்களிடமருந்து...
    எங்களை ஏமாற்றலாம்...
    அல்லாஹ்வை ஏமாற்ற முடியாது...
    முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பத்துல இப்படிதான் இருந்தது. அப்புறம் என்ன நடந்தது என்று உலகத்துக்கு தெரியும்தானே...

    Reply : 0       0

    Adambawa Monday, 28 February 2011 04:56 AM

    please don't exploit the religion for your dirty purpose. don't mix the politics with religion , religion means love of the god and purification of heart which politicians never think about . adam

    Reply : 0       0

    MA Monday, 28 February 2011 09:22 AM

    நல்லது செய்தால் பாராட்டத்தான் வேண்டும். எல்லாவற்றையும் தவறாக எடுக்கக்கூடாது .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .