2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அம்பாறை மற்றும் மொனராகலையில் நல்லிணக்க ஆணைக்குழு

Super User   / 2011 மார்ச் 22 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கான அமர்வுகள் எதிர்வரும் 25ஆம், 26ஆம், 27ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதி அம்பாறை மாவட்ட செயலகத்தில் பொதுமக்களின் சாட்சியங்களை பதிவுசெய்யவுள்ள நல்லிணக்க ஆணைக்குழு, 26ஆம் திகதி மொனராகலை மாவட்டத்தின் புத்தள மற்றும் ஒக்கம்பிட்டிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழு கல்முனை பிரதேச செயலகத்தில் மார்ச் 27ஆம் திகதி பொதுமக்களின் சாட்சியங்களை பதிவுசெய்யவுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான விஜயம் வெள்ள அனர்த்தம் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் காரணமாக பல தடவைகள் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .