Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மார்ச் 23 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் சைக்கிள்கள் பலவற்றை நீண்டகாலமாக திருடி வந்த இருவர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் திருடி விற்பனை செய்யப்பட்ட 5 சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து திருக்கோவில் காயத்திரி கிராமம், மண்டாணை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே அவர்களின் வீடுகளில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இப்பிரதேசங்களில் நீண்ட நாட்களாக பொதுச்சந்தை மற்றும் வீடுகளுக்கு முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்ட சுமார் 10 சைக்கிள்களை 3 பேர் கொண்ட குழுவினர் திருடியதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதுடன், தலைமறைவாகியுள்ள நபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
13 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago