Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Super User / 2011 மே 09 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா முற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஆகியோரின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக்குழுக் கூட்டத்தில் மறைந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தேவரப்பெருமவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன் பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திருகோணமலையில் நடைபெற்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் சம்பந்தமான கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்ட அனுமதிக்காக சமர்ப்பிக்கபடுவைகள், மாவட்ட அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுகள், நீர்ப்பாசனம், விவசாயம், கால்நடை அபிவிருத்தி. நன்னீர் மற்றும் கடல் மீன்பிடி, வனமும், வனவிலங்கு பரிபாலனமும், சுற்றுலா, நீர் விநியோகம், வீடமைப்பு, மின்சாரம், வீதி மற்றும் போக்குவரத்து, சுகாதாரம், காணி, உள்ளுராட்சி, சமுக சேவைகள், மற்றும் கலாசாரம் போன்ற துறைகள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுகளும் இடம்பெற்றன.
இக்குழுக் கூட்டத்தில் சிரேஷ்ட அமைச்சர் பீ.தயாரட்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.சி.பைசால் காசீம், ஸ்ரீயாணி விஜேவிக்கிரம, பீ.எச். பியசேன, கிழக்கு மாகாண அமைச்சர்கள், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பொலிஸ், இராணுவ உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
31 minute ago
2 hours ago