2025 ஜூன் 09, திங்கட்கிழமை

போதைப்பொருள் நிவாரண வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2011 மே 09 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

உலக புகைத்தல் நிவாரண தினத்தை முன்னிட்டு 'போதையிலிருந்து மீட்சிபெறுவோம் வாழ்க்கையினை கட்டியெழுப்புவோம் - நாட்டை பொழிவூட்டுவோம், உலகினை வெல்வோம்' என்ற தலைப்பில் இலங்கையிலுள்ள அனைத்து பிரதேசங்களிலும் போதைப்பொருள் நிவாரண வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கை சமுர்த்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படவுள்ள இந்த வேலைத்திட்டமானது மே மாதம் 31ஆம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் 16ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த தினங்களில் போதை மற்றும் புகைப் பாவனையிலுள்ள ஆபத்துக்கள் மற்றும் சமூக சீரழிவுகள் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்வுகள், புகைத்தல் எதிர்ப்பு கொடி விற்பனை வேலைத்திட்டம், புகைத்தல் மற்றும் போதைப் பாவனையினால் பாதிக்கப்பட்டோர்களுக்கான சமூக உதவி வேலைத்திட்டங்கள் போன்றன இடம்பெறவுள்ளன.

இதற்கமைவாக அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இந்த வேலைத்திட்டங்கள் இவ்வருடம் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்படுவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .