2025 ஜூன் 09, திங்கட்கிழமை

வீட்டுத் தோட்டத்துறை பயிற்சிகள்

Kogilavani   / 2011 மே 10 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

திவிநெகும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலக பிரிவு மட்டத்திலும் வீட்டுத்தோட்ட நடவடிக்கையை மேற்கொண்டோர்களுக்கான பயிற்சி நெறிகள் இடம்பெற்று வருகின்றன.

அரசாங்கத்தின் பத்து இலட்சம் வீட்டுத்தோட்ட மனைப் பொருளாதார அலகுகளை அபிவிருத்திசெய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் கிராமங்கள் தோறும் 100 வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனடிப்படையில் கல்முனைப் பிரதேசத்திலும் வீட்டுத்தோட்ட வேலை திட்டங்களில் ஈடுபடும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான பயிற்சிநெறிகள் இடம்பெற்று வருகின்றன.

கல்முனை பிரதேச செயலக திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் கே.ராஜதுரை தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் விவசாய போதனாசிரியர் திருமதி ரவீந்திரன் உட்பட பிரதேச செயலக கள உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளர் பலரும் கலந்துக்கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .