2025 ஜூன் 09, திங்கட்கிழமை

மலசல கூடங்கள் கையளிப்பு

Kogilavani   / 2011 மே 10 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)
'யுனிசெப்' அமைப்பின் நிதி உதவியுடன்; 'கெப்ஷோ' நிறுவனத்தினால் சம்மாந்துறை பிரதேசத்தின்  நயினகாடு கிராமத்தில் அமைத்துக்கொடுக்கப்பட்ட  மலசலக் கூடத் தொகுதிகளை கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

கெப்ஷோ நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஐ.அப்துல் ஜப்பார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான யுனிசெப் அமைப்பின்  பிரதிநிதி  றிசா ஹொசைனி பயனாளிகளிடம்  கட்டிடத்தை கையளித்தார்.

இதன்போது யுனிசெப் அமைப்பின் தலைமை காரியாலய பிரதிநிதிகளான அஸாதுர் றஹ்மான், ஹஸன் அமனுல்லா¸ நிபால் அலாவுதின்,  நிமலன் செல்வராசா உட்பட கெப்ஷோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்டாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .