Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2011 மே 11 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்)
சாய்ந்தமருது பிரதேசத்தில் சுனாமி அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தர வீடமைப்புத் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும், ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர்களுக்கான தகவல் தொடர்பாடல் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வும் இன்று மாலை சாய்ந்தமருதில் இடம்பெற்றது.
சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இன்றுவரை நிரந்தர வீடுகளைப் பெறாத 406 குடும்பங்களில் 130 குடும்பங்களுக்கான நிரந்தர வீடமைக்கும் வேலைத்திட்டத்தை 'இபாட்' நிறுவனத்துடன் இணைந்து கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.
இவ்விரு ஆரம்ப நிகழ்வுகளின் பிரதம அதிதியாக கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரத்ன கலந்துகொண்டார். அத்துடன், திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைஸால் காசீம் உட்பட கிழக்கு மாகாண அமைச்சர் டீ.நவரெட்னராஜா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கே.எம்.ஜவாட், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர முதல்வர் மஸூர் மௌலானா ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
sam Thursday, 12 May 2011 03:27 PM
யாரோ செய்ததை யாரோ fபயர் யடுக்கன்
Reply : 0 0
Akthar Thursday, 12 May 2011 06:42 PM
எதோ மக்களுக்கு நல்லது நடந்தா சரிதான்.
Reply : 0 0
raze Thursday, 12 May 2011 10:46 PM
naanthan saiwan yanpar saithu mudiccathu yathuvm illai
Reply : 0 0
mam.fowz Friday, 13 May 2011 01:50 AM
எல்லாம் எமது தாய் தங்கைதான் இதில் நாம் சாதி மதம் இன்றி ஒற்றுமையுடன் இருந்தால் சந்தோஷம்!!
Reply : 0 0
m c a fareed Friday, 13 May 2011 02:14 AM
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ எம் ஜெமில் இந்த விடயமாக மிகுந்த அக்கறை காட்டிவருகின்றார். அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
Reply : 0 0
MY.FAISH Friday, 13 May 2011 01:59 PM
சகோதரர் ஜெமீல் அவர்களின் தூய்மையான பணிகள் பாராட்ட வேண்டியவைகள்.
இதில் யாரும் பங்கு போடா முடியாது .வாழ்த்துக்கள்
Reply : 0 0
kalamkalmunai Friday, 13 May 2011 07:44 PM
உண்மையை மூடி மறைக்க வேண்டாம்.சுனாமிக்கு பின் இக்கட்டிடத்தை கட்ட ஈடுபாட்டுடன் முழு முயற்சி செய்து பேசி கட்ட வைத்தது மயோன் முஸ்தபாதான். நாட்டில் இல்லை என்பதற்காக மறக்க முடிமா?
Reply : 0 0
ashraff Saturday, 14 May 2011 12:24 AM
ஹரீஸ் அவர்களின் சேவை இன்னும் தொடர பிராத்திக்கிறேன்
Reply : 0 0
kalam kalmunai Sunday, 15 May 2011 12:52 AM
ஹரிஸ் யார்? ஜமீல் யார்? இருவரும் ஒரு கட்சிதானே ஏன் இவர்களுக்குள் இந்த போட்டி. இவர்கள்தான் முன்மாதிரி முஸ்லிம் அரசியல்வாதிகளா?..
Reply : 0 0
safeer Tuesday, 24 May 2011 08:27 PM
இதை உண்மையாக செய்தவர் மையோன் முஸ்தபா தான் யாரும் மறக்க முடியாது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
39 minute ago
2 hours ago