2025 ஜூன் 09, திங்கட்கிழமை

விஞ்ஞான ஆய்வு கூட கட்டிட திறப்பு விழா

Kogilavani   / 2011 மே 13 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

திருக்கோவில் கல்வி வலயத்தின் கீழ் உள்ள ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயத்தில் 25 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வு கூட கட்டிட திறப்பு விழாவும் க.பொ.த.சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வும் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் எஸ்.இராசமாணிக்கம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் திருக்கோவில் வலய கல்வி பணிப்பாளர் திருமதி என்.பிள்ளைநாயகம், ஆலையடிவேம்பு கோட்டக் கல்வி பணிப்பாளர் வி.குணாளன், ஓய்வு பெற்ற ஆங்கில பாட உதவிக் கல்வி பணிப்பாளர் கே.சதானந்தம் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இதன்போது, க.பொ.த.சாதாரணதர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும், கற்பித்த ஆசிரியர்களும் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .