2025 ஜூன் 23, திங்கட்கிழமை

புதையல் தோண்டிய இருவர் கைது

Super User   / 2011 ஒக்டோபர் 01 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை, மகாஒயா பிரதேசத்தில் புதையல் தோண்டிய இருவரை நேற்று வெள்ளிக்கிழமை மாலை பொலிஸார் கைது செய்துள்ளதாக மகாஒயா பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மகாஒயா, பனுகல பிரதேசத்தில் புதையல் தோண்டி கொண்டிருந்த போதே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, புதையல் தோண்டு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மகாஒயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .