2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு விழிப்பூட்டும் நிகழ்வுகள்

Kogilavani   / 2011 நவம்பர் 13 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார், எஸ்.எம்.எம்.றம்ஸான்)

உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு நீரிழிவு நோய் தொடர்பான விழிப்பூட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, விழிப்புணர்வு வீதி ஊர்வலம், விழிப்புணர்வு கண்காட்சி, பொது மக்களுக்கு இலவசமாக இரத்தம் மற்றும் குருதி அமுக்கம் பரிசோதனைகள் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்குகள் என்பன நடைபெற்றன.

வைத்தியசாலை முன்றலிருந்து ஆரம்பமான விழிப்புணர்வு வீதி ஊர்வலம் பிரதான பாதை வழியாக அப்துல் மஜீட் மண்டபத்;தில் வந்தடைந்தது. 
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் வைத்திய அத்தியேட்சகர் வைத்தியர் ஏ.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம். நௌஷாட், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹநாக்கா, வைத்தியர்கள், தாதிமார்கள், வைத்தியசாலை ஊழியர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • UMMPA Sunday, 13 November 2011 08:14 PM

    நடக்கவேண்டும் இப்படி அடிக்கடி . அப்பத்தான் சீனியும் குறையும். நீங்கள் விரும்பினால் வெண்டிக்காய் ஒன்றை இரவில் இரண்டா வெட்டி அதனை ஒரு தண்ணி நிரப்பிய கப்புக்குள் இதனை பூட்டு மூடி வைத்து காலை எழுந்ததும் உடன் குடிக்கவும் தினமும் . ஒரு மாதத்தின் பின் உங்களின் சீனி தொல்லை கொஞ்சம் குறைந்து இருப்பது உங்களுக்கு தெரியும் . எனவே தினமும் பாவிக்கவும் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .