Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 நவம்பர் 13 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தனது முதல் மாத சம்பளத்தினை வறிய குடும்பம் ஒன்றிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சாய்ந்தமருது மக்களினால் மேயர் சிராஸிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்வில் சம்பள தொகையான 15,000 ரூபாவினை குறித்த குடும்பத்திற்கு வழங்கினார்.
"கல்முனை மாநகர சபை மூலம் கிடைக்கும் மாத சம்பளத்தினை வறிய குடும்பங்களுக்கு வழங்குவேன்" என தேர்தல் பிரசாரத்தின் போது வழங்கிய வாக்குறுதிக்கினங்கவே முதற் சம்பளத்தினை வறிய குடும்பத்திற்கு வழங்கியதாக மேயர் சிராஸ் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இதே போன்று, ஒவ்வொரு மாத சம்பளத்தினை வறிய குடும்பமொன்றுக்கு நன்கொடையாக வழங்குவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
safa Monday, 14 November 2011 05:42 PM
என்ன அரசியல் தந்திரமோ வித்தையோ... இல்லாதவர்களுக்கு கொடுத்து அவர்களின் கஷ்டம் தீர்ந்தால் போதும்.. இதை போன்று எல்லோரும் இருந்தால் நாம் ஏன் குறை கூறப்போகிறோம்? இது நல்ல முன்னுதாரணம்... வாழ்த்துக்கள் சிராஸ்... பணி தொடரட்டும்.. ஏழை எளிய மக்கள் பயன் பெறட்டும்.
Reply : 0 0
faazil.AHA Monday, 14 November 2011 06:21 AM
விளம்பரத்தை விரும்புபவர் நீங்கள் என்றால் அடுத்த சம்பள தினத்தில் எடுக்கும் போடோவையும் மறக்காமல் மேலேற்றம் செய்யவும்.(இது கொள்கை பிடிப்பு, சீரிய மாற்றத்திற்கான முயற்சி, மற்றவரையும் தூண்டுதல்) என 1௦௦௦ காரணம் சொன்னாலும்.. விழலுக்கிரைத்த நீர் அவை!
சிறந்த சேவைக்கு விளம்பரம் தேவை இல்லை.
நலன் விரும்பிகள் விரும்பினாலும் அவர்கள் அறியாமல் உங்களை சாக்கடையின் வழியில் சேர்க்க போகிறார்கள் என்பதே நிஜம்.
வேறு எவர்க்கும் சொல்லத் தேவை இல்லை. உள்ளத்தூய்மை கொண்டு நீங்கள் செய்யும் சேவை என்றால் இறைவன் உங்களுக்கு போதுமானவன்.
Reply : 0 0
Ruzan Monday, 14 November 2011 06:41 AM
இதைப் பெற்றுக்கொண்ட மனம் இப்படி போட்டோ வைத்து விளம்பரம் செய்வதனை கண்டால் வாடும் அல்லவா! இப்படி விளம்பரம் செய்வதனை தவிர்ப்பது நல்லது.
Reply : 0 0
சிறாஜ் Monday, 14 November 2011 02:47 PM
@அக்கரைப்பற்று, இது ஒன்றும் தப்பு இல்லை. ஆனால் இது சொந்தப்பணம் கொடுக்கப்படுது. ஆனால் இங்கு இருக்கும் சில அ.உ. எல்லாம் சொந்தப்பணத்தில் பிச்சையும் கொடுக்கிறார்கள் இல்லையே இது எப்படி.
Reply : 0 0
mbm Monday, 14 November 2011 03:11 PM
மேயர் சிராசுக்கு அவருடைய மாத வருமானமே 2௦௦௦௦/- ரூபா என்றால் அவர் இந்த நன்கொடையை செய்வாரா? தெளிவுபடுத்தவும்! இருந்தாலும் எத்தனையோ பேர் வச்சிட்டு கொடுக்காமல் இருக்கும் போது இவர் செய்த உதவி பாராட்டத்தக்கது! வாழ்த்துக்கள்!
Reply : 0 0
ஹில்மு Monday, 14 November 2011 03:15 PM
மறைமுகமாக தர்மம் கொடுத்தால் நல்லவரெண்டு சொல்லமாட்டினம். அதனாலதான் ஐயா இப்படி செய்ரவர்... ஐயா..நான் ஒண்ணு கேக்கட்டே... அந்த மாலைக்கும் உங்களுக்காக சவாரி வந்த மாட்டுவண்டிக்கும் செலவளிச்ச காசயும் சேர்த்துக் கொடுத்திருக்கலாமே....
அது நீங்க தான் அரசியலுக்கு வர முன்னமே பெரிய பணக்காரராயிச்சே அப்போதெல்லாம் இல்லாத அக்கரை இப்ப எப்படி வந்திச்சு... எதுக்காக வந்திச்சு... இது அவர்ர காச திண்டு ஏப்பம் விட்டு ஜால்ரா போடும் அவரது அடிவருடிகளின் கவனத்திற்கு....
Reply : 0 0
mbm Monday, 14 November 2011 03:17 PM
அன்று நீங்கள் செய்த பாராட்டு விழாவுக்கும் நேர இழுத்தடிப்பிக்குமான காரணம் இன்னும் புரியல சார் எனக்கு! உங்களை யாரோ ப்ளான் பண்ணி கவிழ்க்க பாக்குறாங்க! கவனம் சார்!
Reply : 0 0
amn Monday, 14 November 2011 04:06 PM
சின்ன மீன் போட்டிருக்கிறார், பெரிய மீனை எதிர்பார்த்து!
Reply : 0 0
Ramzan Monday, 14 November 2011 04:16 PM
மேயர் சிராஸ் அவர்களே வாழ்த்துக்கள்,
அரசியலில் கொடுத்த வாக்கை நிறைவேற்றி இருக்கீன்றீர்கள், அதற்கு இது இரு சிறந்த உதாரணம்,
நண்பர்களே சம்பளம் வழங்குவது என்று சொன்ன இடம் மேடைகளிலே அதனால் தான் அவரின் முதல் சம்பளத்தை மேடையில் வைத்து கொடுத்து வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார், அதை நாம் பாராட்டாமல் அரசியல் வியாக்கியானம் புரிகின்றோம், இப் படி பேசுபவர்கள் தான் எம் சமூகத்தின் வீழ்ச்சி, இனியாவது வெட்டி பேச்சை நிறுத்தி சேவைக்கு வழிவிடுவோம், இத்தனைக்கும் நான் அல்ல மக்கள் சேவையை எதிர்பார்ப்பவன்.
அட்டாளைச்சேனை நசீர், இவர் சம்பளத்தை பள்ளிவாயலுக்கு கொடுப்பதினால் மாத்திரம் சிறந்த அரசியல் வாதியாகிவிட முடியாது, அட்டாளைசேனை பிரதேசசபையின் கீழ் வரும் அஸ்ரப் நகரையும் மக்களையும் சிந்திக்கவேண்டும்.
Reply : 0 0
pasha Monday, 14 November 2011 05:09 PM
மேடை போடாமல் கொடுத்து இருந்தால் செய்தி ஆகி இருக்காது.
Reply : 0 0
Akkaraipattu Monday, 14 November 2011 06:16 AM
15000/- சம்பளத்த விளம்பரப்படுத்தி கொடுக்க 20,000/- க்கி மேடைய அலங்கரிச்சிரிக்கார்.?
Reply : 0 0
meenavan Monday, 14 November 2011 07:07 PM
எம்.பி. தேர்தல் இலக்கை நோக்கிய பயணத்தின் அலங்கார ஒத்திகை இப்பவே தொடங்கிவிட்டார்.
Reply : 0 0
UMMPA Monday, 14 November 2011 07:46 PM
மிகவும் நல்ல விடயம் . உங்கள் சம்பளம் மற்ற மதத்தவர்களுக்கும் சென்றடையவேண்டும். அதுதான் உங்கள் நீண்ட பயணத்துக்கு உரிய திட்டமாக இருக்கும்.
Reply : 0 0
nowfil Monday, 14 November 2011 09:20 PM
தர்மம் தலை காக்கும் .
Reply : 0 0
USM Monday, 14 November 2011 09:55 PM
AKP, 15 கொடுக்க அலங்கரிக்கப்பட்ட மேடை அல்ல இது, மாறாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் வழங்கப்பட்ட 15/ இது.
நல்லது செய்தவன வாழ்த்த இவ்வளவு காழ்ப்பு... நீங்கல்லாம் எப்படி அப்பா தர்மம் செய்வீங்க??? ஜெமீல் அய்யா நிசாம் நானா மார்களும் இப்படி விதண்டாவாத விமர்சனம் செய்வார்கள் கவனம்.... அல்லது இந்த விமர்சன காரர்களும் அவர்கள் சார்ந்தவர்களே.... அதுதான் உண்மை.....
Reply : 0 0
Akkaraipattu Tuesday, 15 November 2011 03:31 AM
@USM....
படுத்துக்கு போத்தினதான் தான் என்ன , போத்திக்கி படுத்தாதான் என்ன .......எல்லாமே ஒண்டுதான் ராசா ...........
தர்மம் குடுத்தவனுக்கும் வாங்கினவனுக்கும் இறைவனுக்கும் இடைபட்டது ........
Reply : 0 0
hilmy Tuesday, 15 November 2011 04:58 AM
nallethu senga ungelukku pudykkathe
Reply : 0 0
Dr. Rumi - London Tuesday, 15 November 2011 04:05 PM
really appreciated. It is a lesson for poliricians who used to take from people insted of giving.
Reply : 0 0
sarraj Tuesday, 15 November 2011 10:33 PM
sir ethilayallam arsiyal vendam, ene konjem maraiva saitha nallam.
Reply : 0 0
safeer Thursday, 17 November 2011 09:36 AM
நல்ல விடயம். எல்லா அமைச்சர்களும் இப்படி மனசு வைத்தால் நாட்டு மக்கள் சுபீட்சம் பெறுவார்கள். ஆனால் நாம் செய்யும் நன்கொடையை ஏன் பகிரங்கப்படுபதுத்துகிறீர்கள்? நன்மையை நாடி மனத் தூய்மையுடன் செய்யும் தர்மமே சிறந்தது. சிந்தித்து செயல்படுங்கள் இம்மை மறுமை வெற்றி நிச்சயம்.
Reply : 0 0
easternguy Monday, 14 November 2011 02:35 AM
மச்சான்ஸ், இவங்க சும்மா ஒரு பத்து பதினைந்தாயிரம் சம்பளம் எண்டதாலே இப்படி பிலிம் காட்டுகிறார்கள்....அதே லட்சத்தில் சம்பளமாக இருந்தால் கொடுப்பாங்களா ? ஐயோ ஐயோ.
Reply : 0 0
Thariq Niyas Monday, 14 November 2011 12:09 AM
சபாஷ் என் மனதில் ஒரு அரசியல்வாதி எப்படி இருக்க வேணும்னு நினைத்தேனோ... அதற்கு சிறந்த எடுத்துக் காட்டு.... இது தொடர வேண்டும்.
Reply : 0 0
Lollu Monday, 14 November 2011 12:37 AM
சதாகா வலது கையாலே கொடுக்கணும், ஆனா இடது கைக்கு தெரியாம!!!!!!!!!!
Reply : 0 0
தம்பி Monday, 14 November 2011 12:48 AM
இது அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் செய்து காட்டிய ஸ்டைல்!!
அவர் தனது பிரதேச சபைச் சம்பளங்களை அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாயலுக்கு வழங்குவேன் என்று தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்து - அதற்கிணங்கச் செயற்பட்டும் வருகின்றார்!
சரி, தவிசாளர் நசீரின் நல்ல விடயமொன்றை - மேயர் சிராஸ் பின்பற்றுகின்றார். வாழ்த்துக்கள்!!
Reply : 0 0
சிறாஜ் Monday, 14 November 2011 12:52 AM
இது எல்லாம் அரசியல்ல சகஜமப்பா கண்டுக்க வேண்டாம்.
Reply : 0 0
Kalkudah Adam Monday, 14 November 2011 01:43 AM
வலது கையால் கொடுத்தால் இடது கைக்கு தெரிய கூடாது. இதுதானா அது? இது ஒரு ஹதீஸ்.
Reply : 0 0
ஹில்மு Monday, 14 November 2011 01:45 AM
இத பப்ளிக்கா செய்யணுமெண்டுல்லங்கோ... இதே விடயத்த அரசியல்ல இல்லாம இருந்தா பப்ளிக்கா செய்திருப்பாரா... எல்லாம் அரசியல் ராச தந்திரம்....
Reply : 0 0
Kalkudah Adam Monday, 14 November 2011 01:52 AM
ஜனாப் நசீர் அவர்கள் பள்ளிவாயலுக்கு பதிலாக படிக்க ஆசைபடும் வசதி இல்லாமல் தவிப்பவர்களுக்கு அதை கொடுப்பாரனால் அல்லாஹ் அவருக்கு மேலும் மேலும் வசதியை கொடுப்பான்.
Reply : 0 0
samsudeen Monday, 14 November 2011 02:14 AM
இது ஏன் மேடைக்கு வரவேண்டும். இரகசியமாக பெற்றுக் கொண்டவர் அல்லவா? இதனை வெளிப்படுத்தி பெருமையை பெற்று கொடுத்திருக்க வேண்டும்.
Reply : 0 0
riswan Monday, 14 November 2011 02:18 AM
நீங்கள் ரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் செய்யுங்கள் (அல் குரான்).
Reply : 0 0
mmm86safan Sunday, 13 November 2011 11:55 PM
சபாஸ்! அரசியல்வாதினா இப்படிதான் இருக்கணும்ப்பா!
Reply : 0 0
rilzath Monday, 14 November 2011 02:36 AM
இது தொடருமா ?
Reply : 0 0
Akkaraipattu Monday, 14 November 2011 03:47 AM
இதெல்லாம் பாக்கிறத்துக்கு நல்லாத்தான் இரிக்கி ..... கண்கட்டு வித்தைய போல ..........
Reply : 0 0
Akkaraipattu Monday, 14 November 2011 03:48 AM
நல்லாரிக்கி ...மேடை போட்டு சதக்கா கொடுப்பது ........
Reply : 0 0
Risvi Monday, 14 November 2011 04:18 AM
தற்காலத்தில் எத்தனை பேர் சொந்தப்பணத்தல் மற்றவர்களுக்கு உதவுகிறார்கள்? வெளிப்படையாக இப்படி செய்வது மற்றவர்களை ஊக்கப்படுத்தும். அவரை விமர்சிப்பவரகள். தமது இப்போதைய பதவிக்காலம் முழுவதும் தமது சம்பளத்தில் 10 சதவீதத்தையாவது ஏழைகளுக்கு கொடுக்கட்டும் பார்க்கலாம். (பகிரங்கமாக)
Reply : 0 0
safras Monday, 14 November 2011 04:22 AM
ஒருத்தன் நல்லது செய்தா அதை பாராட்டுங்க. இல்லன்னா பொத்திகிட்டு இருங்க. நீங்களும் செய்யமாட்டிங்க செய்றவங்களையும் விடமாட்டிங்களா? ........
மேயர் சிராஜ் அவர்களுக்கு உங்களுடைய சேவை இன்னும் தொடர என்னுடைய அன்பார்ந்த வாழ்த்துக்கள்.
Reply : 0 0
thirumalaian Monday, 14 November 2011 05:00 AM
பொறுத்திருந்து பார்ப்போம். என்ன நடக்குது என்று ........
Reply : 0 0
Thow Monday, 14 November 2011 05:13 AM
மக்களை வாக்கு வங்கிகளாக பாவிக்கும் அரசியல்வாதிகள் மேடை போட்டு விளம்பரத்தோடு சம்பளத்தை வைப்பில் இடுகிறார்கள்... அவ்வளவுதான்...
Reply : 0 0
jamsith Monday, 14 November 2011 05:28 AM
கொடுப்பதை வீடு தேடிப்போய் கொடுத்திருக்கலாம்.
Reply : 0 0
faazil.AHA Monday, 14 November 2011 06:07 AM
பாராட்டப்பட வேண்டிய விடயம் என்றாலும்..
விமர்சனம் பண்ணும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டாம்.
புகழ் சம்பாதிக்க இதுவும் ஒரு வழி எனும் கொள்கை உடையவர் நீங்கள் என்றால்
அடுத்த photo வையும் அடுத்த மாதம் வெளியிடச் செய்யுங்கள்..
மனத்திருப்தி, சீரிய நோக்கம், தொண்டு எனக்கருதினால்
வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள்..
சிறந்த சேவைக்கு விளம்பரம் தேவையே இல்லை,
மக்கள் மனம் சொல்லும், எதிர்ப்பவர் இதயம் சொல்லும்..
ஷிராஸ் really கிரேட் என்று...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
39 minute ago
2 hours ago