2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பாடசாலை மாணவர்களுக்கு உதவிக்கரம் அமைப்பினால் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Super User   / 2011 நவம்பர் 14 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தில்  பின் தங்கிய கிராமங்களான திராய்க்கேணி மற்றும் மாணிக்கமடு ஆகிய கிராமங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு தென் கிழக்கு லண்டன் நலன்புரி சங்கத்தின் உதவிக்கரம் அமைப்பினால் சீரூடை துணிகள், கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது

இந்நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை மற்றும் ஆலையடிவேம்பு இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டிலேயே இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  கிழக்கு இந்து ஒன்றிய தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன், அம்பாறை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர்  எஸ்.குணநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • ullooran Monday, 14 November 2011 10:15 PM

    உங்கள் பணிகள் இன்னும் பல பின்தங்கிய கிராமங்களைச் சென்றடைய எமது வாழ்த்துக்கள்.........!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .