Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
A.P.Mathan / 2011 நவம்பர் 15 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
காட்டு யானைகளின் சரணாலயமாக தற்சமயம் சம்மாந்துறை நெய்னாகாட்டு கிராமம் மாறியுள்ளது. இதனால் நாளாந்தம் அங்குள்ள மக்களுடைய சொத்துக்கள் காட்டு யானைகளினால் அழிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை அதிகாலையில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானைகளினால் நெய்னாகாட்டு கிராமத்திலுள்ள ஜூம்மா பள்ளிவாசலின் சுவர்கள் உடைக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் அருகிலுள்ள தோட்டங்களையும் இந்த காட்டு யானைகள் நாசப்படுத்தி சென்றுள்ளன.
இந்த காட்டு யானைகளின் அட்டகாசங்களை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊர்மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago