2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கல்முனை மாநகரை தென்னாபிரிக்க மாநகரமொன்றுடன் இணைப்பது தொடர்பில் பேச்சு

Super User   / 2011 நவம்பர் 19 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.ஜெஸ்மின்)

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கhவின்  அவிபிருத்திக்கான பிரதி அமைச்சர்  இப்றாஹிம் இஸ்மாயில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் இன்று சனிக்கிழமை பேச்சு நடத்தியுள்ளார்.

சமகால அரசியல் விடயங்கள் கலந்துரையாடப்பட்ட இச்சந்திப்பின் போது, தென்னாபிரிக்காவிலுள்ள மாநகர சபையொன்றுடன் கல்முனை மாநகர சபையை இணைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக கல்முனை பிரதி மேயர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில், இலங்கைக்கான தென்னாபிரிக்கா தூதுவர் ஜியொ பெரியோ டொயிஜ், கல்முனை  மேயர் சிராஸ் மீராசாஹிப் மற்றும் கல்முனை பிரதி மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்  மற்றும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீட உறுப்பினர் ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • Thariq Niyas Saturday, 19 November 2011 09:19 PM

    வாழ்த்துக்கள்.... கல்முனை மாநகர சபை பிரச்சினைகளிலிருந்து மீட்சி பெற வேண்டும்...

    Reply : 0       0

    mbm Saturday, 19 November 2011 10:11 PM

    கல்முனை மாநகர சபை இலங்கையின் கலங்கரை விளக்கமாய் திகழும் காலம் மிக விரைவில்...

    Reply : 0       0

    ibnu aboo Sunday, 20 November 2011 09:31 PM

    எமது நாட்டையும் தென்னாபிரிக்காவுடன் இணைத்தால் ஏதாவது நலன் நம்மக்களுக்கு கிடைக்குமே.

    Reply : 0       0

    nilam Sunday, 20 November 2011 11:40 PM

    ஆமா நடப்பதை சொல்லுங்கப்பா, சும்மா பீத்திக்கிட்டு இருக்காமல்.
    பேருக்கு கூட்டாமல் உண்மையாக கூட்டுங்க.

    Reply : 0       0

    uooran Monday, 21 November 2011 02:38 AM

    கல்முனை மாநகர சபை நல்ல முன்னெடுப்புகளை செய்ற மாதரி தெரியுது. மேயரே நம்மட கல்முனை மாநகரம் செழிக்க வேண்டுமானால் பிரதி மேயரையும் உங்கட இரண்டு வருடத்துக்கும் இணைத்து செயற்ப்படுங்கள். அதுமாதரித்தான் பிரதி மேயர் அவர்களும் பின்னுள்ள உங்கட இரண்டு வருடத்துக்கும் கலாநிதி சிராஸ் அவர்களை இணைத்து செயற்படனும்
    அப்பத்தான் தென்னாபிரிக்க என்ன எல்லா நாட்டு உதவிகளும் எங்களது காலடிக்கு வரும் .

    Reply : 0       0

    pasha Monday, 21 November 2011 03:24 PM

    ஒருவர் மட்டும் டை அணிந்துள்ளார்

    Reply : 0       0

    ummpa Monday, 21 November 2011 06:59 PM

    என்ன பாஷா நக்கலா ! கலாநிதி ?

    Reply : 0       0

    rafek Monday, 21 November 2011 08:01 PM

    முதலில் டவுன்ல இருக்கிற மின் விளக்குகள் எல்லாவற்றையும் ஒழுங்காக இயங்க வைக்க சொல்லுங்க. பத்து மட்டுமே இரவில் ஒளிருது. மத்ததெல்லாம்?..........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .