2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கல்முனையில் அமைச்சர் மேர்வின்

Super User   / 2011 நவம்பர் 19 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்ஸார்)

மக்கள் தொடர்பாடல் அமைச்சர்  மேர்வின் சில்வா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 66ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை கல்முனைக்கு விஜயம் செய்து அங்குள்ள விகாரை, கோயில், தேவாலயம், பள்ளிவாயல் ஆகியவற்றுக்குச் சென்று ஜனாதிபதிக்கு தெய்வ ஆசி வேண்டி பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்.

கல்முனை ஸ்ரீசுபத்திராராமய விகாரை, முருகன் கோயில், வேளாங்கன்னி தேவாலயம், இஸ்லாமாபாத் பள்ளிவாயல் ஆகியவற்றிற்கு அமைச்சர் மேர்வின் சில்வா விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், தென்னங்கன்றுகளையும் நாட்டி வைத்தார்.

இதேவேளை, கல்முனை சந்தையூடாகச் செல்லும் விகாரை வீதியின் அவலநிலையை நேரில் பார்வையிட்ட அமைச்சர் அவ்விடத்தில் இருந்தவாறே சம்மந்தப்பட்ட அமைச்சருடன் தொலைபேசியில் உரையாடியதுடன், இவ்வீதியின் அபிவிருத்தி பணிகளை உடன் ஆரம்பிக்குமாறு பிரதேச அதிகாரிகளுக்கு பணிப்புரையும் விடுத்தார்.

கல்முனை ஸ்ரீசுபத்திராராமய விகாரைக்கு 5 இலட்சம் ரூபாவும், முருகன் கோவிலுக்கு ஒரு இலட்சம் ரூபாவும் வழங்குவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.

இந்நிகழ்வுகளில், கல்முனை ஸ்ரீசுபத்ராராமய விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர், நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜேவிக்கிரம, கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன், மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.றியாஸ், அமைச்சரின் இணைப்பாளர் சுனில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0

  • fazal Sunday, 20 November 2011 03:51 AM

    வருக வருக

    Reply : 0       0

    senaiyuraan Sunday, 20 November 2011 04:58 AM

    கல்முனையில் யார கட்டலாம்????

    Reply : 0       0

    sakeena Sunday, 20 November 2011 07:38 AM

    அல்லாஹ்வின் மாளிகையில் என்னவெல்லாம் நடக்கின்றது. நிராகரிப்பார்களுக்காக பிராத்தனை பண்ணும் இந்த லெப்பை அண்ணலாரின் ஹதீஸ்களைப் பார்த்ததில்லை போலும்.....

    Reply : 0       0

    saniyan Sunday, 20 November 2011 08:11 AM

    நம்ம மேயர் என்ன உண்மையா என்ன பண்ணுறாரு எண்டு பாக்கத்தான் வந்தாரோ?

    Reply : 0       0

    perera Sunday, 20 November 2011 10:52 AM

    இதென்ன ஞானம்

    Reply : 0       0

    malwanai maindan Sunday, 20 November 2011 12:22 PM

    பார்தீர்களா ?...................
    எவ்வளவு நல்ல மனிதர் ..........................
    இவரை போய் தப்பு தப்பா பேசுறீங்களே ?..........
    இது நியாயமா ?.................
    (மல்வானை மைந்தன்)

    Reply : 0       0

    nasirahamed_lecturer_ninthavur Sunday, 20 November 2011 03:04 PM

    அங்க அவர் மாதிரிதான் எல்லோரும் , ஹ ஹ , யாரை கட்டுவது ..........

    Reply : 0       0

    asker Sunday, 20 November 2011 05:42 PM

    இவருக்கு நிறைய எதிர்ப்பு தான் உண்டு, ஆனால் இவர் சையும் எல்லா செயலிலும் ஓர் அர்த்தம் உண்டு. மரத்தில் எதற்கு கட்டினார்? டெங்கு நோய் வேலைத்திட்டத்தை சரியான முறையில் செய்யாதத்திற்கு முன்னேஸ்வரத்தில் உரிய முறையில் ஆடுகளை பலியிடாததற்கு .....

    Reply : 0       0

    nawas Sunday, 20 November 2011 06:36 PM

    இது எல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகம்.

    Reply : 0       0

    meenavan Sunday, 20 November 2011 07:00 PM

    senaiyuraan பிரதி அமைச்சர் பதவி என்றால் நமது மக்கள் பிரதிநிதியை கட்டலாமா....? அவர் செய்யும் செயலில் அர்த்தம் உள்ளதை கண்டுபிடித்த asker, செய்யும் தொழிலையும் திறம்பட செய்யவேணும் இல்லாவிடில் மே...சில்வா கட்டிவிடுவார், அஸ்கர் நிலைமை பொல்லை கொடுத்து அடிவாங்கியதாகிவிடும்.

    Reply : 0       0

    avathaani Sunday, 20 November 2011 07:20 PM

    மக்கள் தொடர்பாடல் அமைச்சர் வந்தால்,நமது எம்.பி. எங்கே போனாரோ?

    Reply : 0       0

    ibnu aboo Sunday, 20 November 2011 09:25 PM

    ஹி இஸ் எ ரியல் மினிஸ்டர். ஹிஸ் இன் சைட் இஸ் குட். தட்ஸ் ஓல்.

    Reply : 0       0

    nasmir Monday, 21 November 2011 12:42 AM

    நல்ல அமைச்சா் எம்மதமும் சம்மதம்

    Reply : 0       0

    fir Tuesday, 22 November 2011 10:19 PM

    இப்படியான மினிஸ்டர் தன கல்முனைக்கு முக்கியம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .