2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

துரைவந்தியமேடு கிராமம் வெள்ளத்தில்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 27 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகரசபைப் பிரிவிலுள்ள துரைவந்தியமேடு கிராமம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் அங்குள்ள மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொருட்டு துரைவந்தியமேட்டு கிராமத்திற்கு நேற்று சனிக்கிழமை கல்முனை பிரதேச செயலாளர் கே.லவநாதன், மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், மாநகரசபை ஆணையாளர் ஜே.லியாக்கத்தலி, முதல்வரின் பிரத்தியேக செயலாளர்     ஏ.எம்.இன்ஷாட், மாநகரசபை உறுப்பினர் எம்.எச்.நபார், சமூகசேவை உத்தியோகத்தர் மற்றும் கடற்படை அதிகாரிகள்  சென்றனர்.

இவர்கள் அங்குள்ள மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதுடன், சமைத்த உணவையும்  வழங்கினர்.
இதேவேளை, கல்முனை கிட்டங்கி வீதி தாம்போதியின் மேலாக போக்குவரத்து செய்ய முடியாதவாறு வெள்ளம் பாய்ந்து வருவதால் குடியேற்ற கிராம மக்களின் போக்குவரத்திற்கென இராணுவத்தினர் இயந்திரப்படகு சேவையை ஆரம்பித்துள்ளனர்.           

                                


You May Also Like

  Comments - 0

  • Ganesh Sunday, 27 November 2011 07:10 PM

    மீண்டும் ஒரு அஷ்ரப் உருவாகலாம் சீரஷின் மூலம்
    பொது மக்களை நலம் விசாரித்தாலே போதும் சகலரும் ஒன்று சேருவார்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .