2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - எல்லைகளை நிர்ணயம் ஆணைக்குழு பேச்சு நடத்த இணக்கம்

Super User   / 2011 நவம்பர் 28 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பிரதேசங்களின் எல்லைகளை நிர்ணயம் செய்வது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் எல்லைகளை நிர்ணயம் ஆணைக்குழுவிற்கும் இடையில் பேச்சு நடத்துவது என இரு தரப்பினராலும் இணக்கம் காணப்பட்டதாக அக்கட்சியின் பதில் பொது செயலாளர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் பிரதேச எல்லைகளை நிர்ணயம் செய்தல் தொடர்பாக ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழு இன்று திங்கட்கிழமை அம்பாறை மாவட்ட செயலகத்தில் கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கலந்துகொண்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர், அக்கட்சியுடன் பேச்சு நடத்துவதன் முக்கியத்துவம் தொடர்பில் வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து எல்லை நிர்ணய குழுவின் தலைவி திருமதி புள்ளுமுல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் கொழும்பில் பேச்சு நடத்துவது என உறுதியளித்ததாக நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

இது தொடர்பில் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிர் ஜோன் செனவிரட்னவுடன் பேச்சு நடத்தி இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சம்மாந்துறை பிரதேச செயலகத்தை இரண்டு பிரதேச செயலகங்களாக பிரிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எல்லை நிர்ணய குழுவிடம் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

குறித்த கடிதத்தை அம்பாறை மாவட்ட செயலகத்தில் வாசித்துள்ளார். இதனையடுத்து குறித்த வேண்டுகோளிற்கு, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நொஷாட் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, எல்லை நிர்ணய ஆனைக்குழுவின் தலைவி திருமதி புள்ளுமுல்லவின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அம்பாறை மாவட்ட செயலாளர் நீல் டி அல்விஸ், இரத்தினபுரி மாவட்ட செயலாளரும் முன்னாள் அம்பாறை மாவட்ட செயலாளருமான சுனில் கன்னங்கர, எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அங்கத்தர்வர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள் மற்றும் புத்திஜீவிகள் என பலர்  பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தின் போது அம்பாறை மாவட்டத்தின் புதிய பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் கிராம சேவையாளர் பிரிவுகளை உருவாக்கல், தற்போதுள்ள பிரிவுகளை திருத்தியமைப்பதற்குமான கருத்துக்கள், அபிப்பிரயாயங்கள், ஆலோசனைகள் மற்றும் மக்கள் கோரிக்கைகள் என்பனவும் இங்கு பெறப்பட்டன.


You May Also Like

  Comments - 0

  • ummpa Tuesday, 29 November 2011 02:15 PM

    சம்மாந்துறை பிரதேச சபையை இரண்டு ஆக பிரித்தால் என்ன? இதுக்கு எதிர்ப்பு என்றால் ஏன் என்பதை திரு: நௌசாத் விளக்கவேண்டும். மக்களுக்கு தேவை இதன் அனுகூலமும் பிரதிகூலமும் எனவே உங்கள் விளக்கம் .................?

    Reply : 0       0

    uooran Wednesday, 30 November 2011 09:21 PM

    ஐம்பத்து ஒரு கிராம சேவகர் பிரிவுகளைக்கொண்ட பிரதேச செயலாளர் பிரிவை இரண்டாக அல்ல மூன்றாக பிரிக்க வேண்டியது அவசியம்.
    காரணங்கள் பல .....
    அரசின் சேவைகளை மக்கள் இலகுவாக பெற வேண்டும் ..
    பிரதேச செயலகங்களுக்கு கிடைக்கும்.. நிதி
    இன்னும் பல..

    Reply : 0       0

    gaf Friday, 02 December 2011 10:26 PM

    நல்ல விடயம் இது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .