2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சாரணிய குழுத் தலைவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 29 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை கல்வி வலயத்திலுள்ள 10 பாடசாலைகளின் சாரணிய குழுத்தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கல்முனை கல்வி வலயத்தின் உடற்கல்வி உதவிப் பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அக்கரைப்பற்று - கல்முனை சாரணிய மாவட்ட பயிற்சிக்குப் பொறுப்பான உதவி ஆணையாளர் எம்.ஐ.எம் முஸ்தபா, உதவி மாவட்ட ஆணையாளர் கே.எம்.தமீம், அட்டாளைச்சேனை கல்வியியற்கல்லூரி உடற்கல்வித்துறை விரிவுரையாளர் எம்.ஐ.எம்.அமீர் மற்றும் சாரண பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • avathaani Tuesday, 29 November 2011 05:16 PM

    உதவி ஆணையாளர் மஞ்சள் T-Shirt அணிந்திருப்பது, சாரணிய தலைமை பயிற்ச்சி பெறுபவர்களிலிருந்து தன்னை வேறுபடுத்தி காட்டுவதற்கா? அறுபத்தி எட்டு வயதில் அவரின் கள செயற்பாடு பாராட்டுக்குரியது. ஆடை விடயத்தில் சற்று பொடுபோக்கு நல்லதல்ல . பயிற்சி பெறுபவர்களும் அதை பின்பற்றலாம்.

    Reply : 0       0

    சிறாஜ் Tuesday, 29 November 2011 10:46 PM

    அவதானிக்கு தலை சரியில்லை போலும். ஆசிரியர் அவர் மாணவர்களைப் போன்று ஆடையணியனும் என்ற சட்டம் இல்லை..

    Reply : 0       0

    avathaani Wednesday, 30 November 2011 03:15 AM

    சிராஜ் உங்களுக்கு தலையினுள் இருக்க வேண்டியது வேறு எங்கோ அமைந்து விட்டது போல. இங்கு ஆசிரியர், மாணவர் என்ற சட்டத்தை விட மேலோங்கி இருப்பது தலைமைத்துவ பயிற்சி, சாரணியர்களுக்கு என பிரத்தியேக ஆடை அவரவர் நிலைக்கு ஏற்ப சீருடை, இலட்சினை(Badge-1911ல் அறிமுகம்) உண்டு என்பதை பணிவுடன் தெரிவிக்கிறேன்.

    Reply : 0       0

    சிறாஜ் Wednesday, 30 November 2011 05:02 AM

    அவதானி சரியாக அவதானி. சாரணியத்திற்கு இப்ப டீ சேர்ட் யூனிபோமாக பெச் எல்லாம் சேர்த்து வருகிறது என்பதனை நன்றாக அவதானித்து கேட்டு அறிந்து கொள்ளவும். சாரணியத்திலேயே தனது முப்பது வருடத்தை கழித்த அந்த முஸ்தபா ஆசிரியருக்கு ஆடையப்பற்றி யார் சொல்லுவது? பிணாடு கேட்டதாம் பனங்காயிடம், 'நீ யாருப்பா' என்று. அப்படித்தான் உள்ளது உங்கள் கதை.

    Reply : 0       0

    avathaani Thursday, 01 December 2011 04:55 AM

    நிர்வாண உலகத்தில் கோவணம் கட்டியிருப்பவன் பைத்தியக்காரன். அதுதான் நினைவுக்கு வருகிறது.

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 01 December 2011 05:19 AM

    ஹி ஹி ஹி எனக்கு சிரிப்பு வருது நான் சிரிக்க வில்லை. அவதானி நல்லா அவதானி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .