2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இரவோடிரவாக மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டமையானது அரசியல் அடாவடித்தனத்தின் மற்றொரு முகமாகும்: தவிசாளர்

Super User   / 2012 மார்ச் 27 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

"காணி உரிமையாளர்களின் அனுமதி பெறப்படாமல் அட்டாளைச்சேனை, கோணாவத்தை ஆற்றினை அண்டிய ஏழை மக்களின் குடியிருப்பு நிலங்களில் இருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பையின் தேவைக்காக இரவோடிரவாய் வெட்டி வீழ்த்தப்பட்டமையானது அரசியல் அடாவடித்தனத்தின் மற்றொரு முகமாகும்.

தான் தோன்றித்தனமான அதிகாரங்களும், அடாவடித்தன அரசியலும் வரலாற்றில் ஒரு போதும் நின்று நிலைத்ததில்லை" என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.எம்.நசீர் தெரிவித்தார்.

கமநெகும அபிவிருத்தித் திட்டம் எனும் பெயரில் அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றினை அண்டிய பகுதிகளில் இருந்த ஏராளமான பயன் தரும் தென்னை மரங்கள் சில நாட்களுக்கு முன்னர் வெட்டி வீழ்த்தப்பட்டிருந்தன.

இவ்விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே தவிசாளர் நசீர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கோணாவத்தை ஆற்றங்கரையோரத்தில் காணிகளை கொண்டிருப்பவர்கள் அவர்களின் காணிகளில் உள்ள தென்னை மரங்களில் மூலமாக ஓரளவு வருமானத்தினை பெற்று வந்தார்கள். ஆனால், இப்போது அவர்களின் காணிகளிலிருந்த தென்னை மரங்கள் எந்தவித அனுமதியும் பெறப்படாமல் நள்ளிரவில் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன.

இதனால், பல காணி உரிமையாளர்கள் குறித்த தென்னைகள் மூலமாகப் பெற்று வந்த நல்லதொரு வருமானம் இழக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் என்கிற வகையில் என்னிடம் முறையிட்டுள்ளதோடு, இது தொடர்பில் தமக்கு உரிய நியாயத்தினைப் பெற்றுத் தருமாறும் கோரியியுள்ளனர்.

ஆற்று நீர் நிலத்தினை அரிக்காமல் சுமார் 30 வருட காலமாக இந்த தென்னை மரங்கள் - சூழலுக்கு பாதுகாப்பாக இருந்தது. ஆனால், இப்போது அந்த மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டமையால் சூழலும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.
 
அபிவிருத்தி என்பது – மக்களுக்கு நன்மைகளை வழங்கும் பொருட்டு செய்யப்படுகின்றவையாகும். ஆனால், மக்களுக்கு ஆண்டாண்டு காலமாக பயன் கொடுத்து வரும் விடயங்களை அழித்து விட்டுச் செய்யப்படுபவை ஒரு போதும் அபிவிருத்தி ஆகாது.

அதுமட்டுமல்ல, அவ்வாறு தான் குறித்த தென்னை மரங்களை வெட்ட வேண்டிய தேவை ஏற்பட்டால், அதைச் செய்வதற்கு ஒரு வழிமுறை இருக்கின்றது. முதலில் காணி உரிமையாளர்களிடம் அனுமதி பெறுதல் வேண்டும். பின்னர் பிரதேச சபையில் அனுமதி கோரியிருத்தல் வேண்டும். அதன் பிறகே – மரங்களில் கை வைத்திருக்க வேண்டும்.

இவைகளைப் பின்பற்றாமல், எடுத்தேன் கவிழ்த்தேன் என்கிற ரீதியில், தான் ஒரு அமைச்சர் தான் விரும்பினால் எதையும் செய்ய முடியும் என்கிற அகங்காரத்தோடு, அடுத்த மனிதனின் காணியிலிருக்கும் தென்னை மரங்களை அடாவடித்தனமாக வெட்டி வீழ்த்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது கண்டிக்கத்தக்கதொரு செயலாகும்.  

தென்னை மரம் என்பது சிலருக்கு சிறியதொரு விடயமாகக் கூடத் தெரியலாம். ஆனால், சில குடும்பங்களின் ஜீவனோபாயமே இவ்வாறான தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் வழியாகத்தான் கழிகிறது என்பதையும் நாம் எண்ணிப் பார்த்தல் அவசியமாகும்.

அந்த வகையில், கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை இவ்வாறு நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தியிருப்பதன் மூலம் பல ஏழை மக்களின் வயிற்றில் அடித்துள்ளார். ஏழைகளின் பாவம் மிக கடுமையானது. ஒரு நாள் அமைச்சர் அதை அனுபவிப்பார்" என்றார்.


You May Also Like

  Comments - 0

  • சேணையுரான் Wednesday, 28 March 2012 03:30 AM

    தவிசாளர் அவரகளே

    மரங்கள் வெட்டப் பட்டதற்கு ஊரின் தவிசாளர் என்ற வகையில் என்ன செய்யப் போகின்றீர்கள் ? என்பதை சொல்லுங்கள். இப்படி அறிக்கை விடுவதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருபோதும் நன்மை கிடைக்கப் போவதில்லை .
    30 வருடங்களுக்கு முன் நடப்பட்ட மரங்கள் எதுவும் அங்கு இருக்கவில்லை. மக்களால் அத்து மீறி ஆற்றை மூடி நடப்பட்ட மரங்கள் நீர்ப்பாசன அதிகாரிகளின் வரை படத்திற்கு ஏற்ப அகற்றப்பட்டது. இதில் நீங்கள் அரசியல் செய்ய வேண்டாம். ஆற்றை மூடி கட்டிடம் கட்டும் போது பிரதேச சபையும் அதன் தவிசாளர் நீங்களும் துாக்கமா?

    Reply : 0       0

    சிறாஜ் Wednesday, 28 March 2012 04:42 AM

    சேனையூரான் வக்காளத்து வாங்க வேண்டாம். இங்கு நடந்திருப்பது தப்பு என்றுதான் தவிசாளர் சொல்லுகிறார் . இறாலின் வேலை பார்க்காமல் நியாயம் பேசவேண்டும் சும்மா பம்மாத்து காட்டவேண்டாம்.

    Reply : 0       0

    risni Wednesday, 28 March 2012 05:11 AM

    if you fail to plan,your plan will fail. main it .this is to addalaichenai developers

    Reply : 0       0

    razeek Wednesday, 28 March 2012 05:41 AM

    30 வருடம் என்பது தவறு எனக்கு தெரிய நாப்பது வருசம் அவ்விடத்தில் தென்னை மரம் இருக்கு பி ஏ மஜீதுக்கு ஜலால்தீன் எம் பி க்கு ஒப்பிசி இருந்த தெரியாத புள்ளயால் கண்ணதொறங்கொ அற்பனு ஆசை வந்தா அர்த ராத்தியென்ன நட்ட நடு பகல் என்ன

    Reply : 0       0

    janoovar Wednesday, 28 March 2012 06:12 PM

    தவிசாளர் அவர்களே மேடை பேச்சுக்கள், பத்திரிகை அறிக்கைகள் மக்களை அசத்தப்போவது இல்லை. ஆட்சிக்கு வந்ததில் இருந்து உங்கள் கட்சியும், தலமைத்துவமும் மக்களுக்கு செய்த அபிவிருத்திகள் என்ன? அபிவிருத்தி செய்யும் அமைச்சருக்கு ஏன் இடையூராக இருக்கின்றீர்கள்? இந்த நெருப்பில் நீங்கள் குளிர் காயத் தேவையில்லை. மக்களுக்கு இயன்றளவு ஏதாவது அபிவிருத்திகளை செய்து காட்டுங்கள். இப்படி ஒரு திட்டத்ததை கொண்டுவரா விட்டால் கோணாவத்தை ஆறு ஒன்று இருந்ததா என்று எமது இளைய சமுதாயத்தினர் எங்களை கேட்கக் கூடும், ஆற்றை மூடும் போது இந்த பிரதேச சபை எங்கு சென்றது, அதிகாரிகள் எங்கே நீதி நிழைக்கட்டும் சமுதாயம் அபிவிருத்தி காணட்டும் முடியுமானால் அமைச்சருக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.

    Reply : 0       0

    rz Wednesday, 28 March 2012 07:15 PM

    மரங்களை அழிப்பதால் ஏற்படும் சுழல் டிவேர்சிட்டி மினிஸ்டர்க்கு தெரியாதோ?

    Reply : 0       0

    min from qatar Wednesday, 28 March 2012 08:58 PM

    ஜனுவர்!!!! . அமைச்சர் என்ன மாதிரியான அபிவிருத்தி செய்யபோகிறார்.? அந்த அபிவிருத்தி ஏழை மக்களுக்கு பலன் கிடைக்குமா ? என்பதை உறுதிபடுத்துங்கள்.

    Reply : 0       0

    pasha Wednesday, 28 March 2012 09:12 PM

    பிரதேச சபை தலைவரே மதிப்பிற்குரிய அமைச்சர் செய்யும் அபிவிருத்திகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நீங்கள் உங்கள் கட்சி தலைமையிடம் உள்ள அமைச்சை பயன் படுத்தி செய்த ஒரு அபிவிருத்தியை அல்லது வழங்கிய ஒரு தொழில் வாய்ப்பை சொல்லுங்கள் பாப்போம் .

    Reply : 0       0

    senaiyuraan Wednesday, 28 March 2012 11:05 PM

    ராசிக் நானும் அதைத்தான் சொல்லுறன் நீங்கள் சொல்லுகின்ற மரங்கள் ஒன்றும் அழிக்கப் படவில்லை. அவை இருந்தால் போல் உள்ளது அழிக்கப்பட்ட மரங்கள் அத்துமீறி ஆற்றை மூடி நாட்டபட்ட மரங்கள்தான் ஒலியே பழமை வாய்ந்த மரங்கள் அல்ல.

    Reply : 0       0

    senaiyuraan Wednesday, 28 March 2012 11:12 PM

    சிராஜ்
    நான் யாருக்கும் வக்காலத்து வாங்க தேவை இல்லை. இங்கு மரத்தின் சொந்தக்காரர்களிடம் பல சுற்று பேச்சுக்களின் பின் அவர்கள் அனுமதியோடுதான் செய்யப்பட்டது . இதனை அபிவிருத்தியை விரும்பாத சில சக்திகள் அரசியலாக்கி தம்பட்டம் அடிக்கின்றன. கடைசியில் அறிக்கை மட்டும் மிஞ்சும்.

    Reply : 0       0

    zeefa Thursday, 29 March 2012 07:15 PM

    அமைச்சர் உதுமான் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். நீங்க எதை செய்தலும் நல்லதுதான் செய்வீர்கள் வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .