2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அக்கரைப்பற்று பிரதேச சபையில் பல்வேறு ஊழல்: பிரதி தவிசாளர் ஹக்கீம்

Super User   / 2012 மார்ச் 27 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரைப்பற்று பிரதேச சபையில் பல்வேறுபட்ட ஊழல் மோசடிகள் இடம்பெற்றுவருவதாக பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஜ.எல்.ஏ.ஹக்கீம் குற்றஞ்சாட்டினார்.

கடந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட அக்;கரைப்பற்று பிரதேச சபையின்
ஆட்சியை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கைப்பற்றியது முதல் பல ஊழல் மோசடிகள் இடம்பெற்று
வருவதாகவும் அதே கட்சியை சேர்ந்த பிரதி தவிசாளர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச சபையில் மேற்கொள்ளப்படும் ஊழல் மோசடிகள்  குறித்த விளக்கமளிப்பதற்காக விசேட ஊடகவியலார் மகாநாடொன்றை பிரதேச சபையின்
பரதி தவிசாளர் ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

"இந்த பிரதேச சபையை நாங்கள் பெறுப்பேற்று 10 மாதங்களாகின்றன. இந்த கால பகுதியில் விவசாய பிரதேசத்தில் மூன்று கொங்கீறிட் பாதைகள் நிர்மாணித்துள்ளதாக தெரிவித்து பணம் பெறப்பட்டுள்ளது. ஆனால் குறித்த பிரதேசத்தில் கிறவல் பாதைகள் போடப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் உள்ள வறிய மக்களுக்கு குடி நீரை பெற்றுக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் அரச சார்பற்ற நிறுவனத்தின் அனுசரனையுடன்; தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பின் குறைந்த கட்டணத்துடனான திட்டத்தில் 66 சமுர்த்தி பயனாளிகளுக்கு
இடப்பட்ட பட்டியலில் அரசாங்க உத்தியோகத்தர் சிலரதும் சபை உறுப்பினர் சிலரும் பெயர்கள் உள்வாங்கப்பட்டு குடிநீர் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் உழவு இயந்திரத்தை பயன்படுத்தி இரவு வேளைகளில் சட்டவிரோதமான முறையில் ஆற்று மண் ஏற்றி விற்கப்பட்டு வருகின்றது. அத்துடன் பிரதேச செயலகத்தினால் வறிய மக்களின் வாழ்வாதரத்திதை மேம்படுத்த வழங்கிய பசு மாடுகளை சபை உறுப்பினரொருவர் தனது உறவினரது பெயரை வழங்கி தனதாக்கி கொண்டுள்ளார்.

அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்ட பொருட்களில் மோசடிகள் மற்றும் பல்வேறு அபிவிருத்திகளில் மோசடிகளும் ஊழலும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக கட்சி தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவை சந்திக்க பல தடவை முயற்சி மேற்கொண்டும் சந்திக்க முடியவில்லை.

கடந்த 8 மாதங்களாக சபையின் கூட்டறிக்கை எனக்கு வழங்கப்படவில்லை. இதனையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சபை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நான் இன்று வரை சபை அமர்வுகளில் கலந்துகொள்ளவில்லை.

எவ்வாறாயினும் அக்கரைப்பற்று பிரதேச சபையில் இடம்பெறும் ஊழல் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு உள்ளவனாக உள்ளேன்" என்றார்.


You May Also Like

  Comments - 0

  • சிறாஜ் Wednesday, 28 March 2012 04:56 AM

    எங்களுக்கு தெரியும் குதிரை எங்கெல்லாம் பாயும் என்று ஆனால் இப்படி கொங்றீட் வீதி என்று பணம் எடுத்து கிறவல் வீதி போட்டிருப்பது மாபெரும் தவறு.

    Reply : 0       0

    razeek Wednesday, 28 March 2012 05:36 AM

    இன்னும் எவ்ளோவர இருக்கோ?

    Reply : 0       0

    pasha Wednesday, 28 March 2012 03:50 PM

    காற்றுள்ள போதே அமைச்சரும் அவரது ஆதரவாளர்களும் தூற்றுகிறார்கள் போல

    Reply : 0       0

    Aaeis Muhammed Wednesday, 28 March 2012 05:13 PM

    பிரதேச சபையின் பிரதி தவிசாளர் ஜ.எல்.ஏ.ஹக்கீம்! உங்களால் கட்சி தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாவை சந்திக்க பல தடவை முயற்சி மேற்கொண்டும் சந்திக்க முடியவில்லை என்றால் பிரதேச சபையில் மேற்கொள்ளப்படும் ஊழல் மோசடிகள் குறித்த விளக்கமளிப்பது நியாயம்தான்..

    Reply : 0       0

    mohamed Wednesday, 28 March 2012 05:53 PM

    யாரவது ஒருவர் akkaraipattu municipal council and akkaraipattu presdesiya saba இற்கும் இடையிலான வித்தியாசத்தை தெளிவு படுத்தலாமா ?

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 29 March 2012 03:31 AM

    முதல்ல அக்கரைப்பற்றுக்கு குற்றப்புலனாய்வுத்துறை காரியாலயம், இலஞ்ச ஊளல் அதிகாரி காரியாலயம் எல்லாம் திறக்கனும்.

    Reply : 0       0

    sopnam Thursday, 29 March 2012 05:48 AM

    அப்ப விரைவில அக்கரப்பத்துல புதுக் கட்சி ஒன்று மொளைக்கும் எங்கிறியள்.....

    Reply : 0       0

    Aaeis Muhammed Thursday, 29 March 2012 04:04 PM

    சகோதரர் சிராஜ் இன் கோரிக்கையை அமைச்சர் அதாஉல்லாஹ் நிறைவேற்றுவார். அக்கரைப்பற்று அரசியல் இந்திய தமிழக அரசியல் கட்சிகளையும் வென்றுவிடும் கவலை வேண்டாம்..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .