2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அக்கரைப்பற்று பிரதேச சபையில் தளபாடங்கள், கணினிகளை சேதப்படுத்தியதாக பிரதி தவிசாளர் மீது குற்றச்சாட்டு

Super User   / 2012 மார்ச் 28 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா, எம்.மாறன்)

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குள் இன்று புதன்கிழமை காலை நுழைந்த பிரதி தவிசாளர் ஐ.எல்.ஏ.ஹக்கீம் உள்ளிட்ட குழுவினர் சபைக்கு சொந்தமான தளபாடங்கள் மற்றும் கணனிகள் ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தவிசாளர், பிரதேச சபை செயலாளர் ஏ.எல்.சாலஹுதீன் மற்றும் ஊத்தியோகத்தர்களை அச்சுறுத்தியும் உள்ளார் எனவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யதுள்ளதாக பிரதேச சபை செயலாளர் ஏ.எல்.சாலஹுதீன் தெரிவித்தார்.

இதன்போது, அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு தனிப்பட்ட வேலை நிமித்தம் வருகை தந்திருந்த அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் இணைப்புச் செயலாளர் எம்.ஐ.பாரூகின் (றினோஸ்) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடி பிரதி தவிசாளர் ஐ.எல்.ஏ.ஹக்கீம் மற்றும் எஸ்.லாபீர் உள்ளிட்ட குழுவினரால் உடைக்கப்பட்டுள்ளது என அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகள் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் பிரதேச சபை செயலாளர் ஏ.எல்.சாலஹுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் இணைப்புச் செயலாளர் எம்.ஐ.பாரூக் ஆகியோரினாலேயே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சீபி – ஜீஆர் 2030 என்ற இலக்க தகட்டை கொண்ட காரில் வந்த இக்குழுவினரே பிரதேச சபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளரின கார் ஆகியவற்றிற்கு தேசப்பட்டுத்திவிட்டு சென்றுள்ளதாக பிரதேச சபை செயலாளர் ஏ.எல்.சாலஹுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் எம்.ஐ.பாரூக் ஆகியோரினால் அக்கரைப்ற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தையடுத்து அக்கரைப்பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்கள் அனைவரும் பணிப்பகிஷ்கரிப்பில் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசீக் கருத்துத் தெரிவிக்கையில்,

"குறிப்பிட்ட நபர் சபை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் முறன்பாடான கருத்துக்ளையே தெரிவித்து வருகின்றார். அத்துடன் பிரதேச சபை செயலாளர் மற்றும் ஊழியர்களை அச்சுறுத்தி வந்துள்ளதுடன் சபை நடவடிக்கைகளின் போது முறையற்ற வார்த்தை பிரயோகங்களையே பாவித்து வருகின்றார்.

இந்த சபையின் சீரான சேவைகளையும் பணிகளையும் பொறுக்க முடியாமல் ஏற்பட்ட காழ்புணர்ச்சி காரணமாகவே இவ்வாறு சிறுபிள்ளைத்தனமான செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக" தெரிவித்தார்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பிரதேச சபை பிரதி தவிசாளர் ஐ.எல்.ஏ.ஹக்கீமை தமிழ்மிரர் இணையத்தளம் பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தும் பயனளிக்கவில்லை.



You May Also Like

  Comments - 0

  • FAR2CO Wednesday, 28 March 2012 10:50 PM

    எங்க நம்ம அமைச்சர்?

    Reply : 0       0

    zuzu Thursday, 29 March 2012 12:29 AM

    இதற்கு உடனடியாக பொலிஸா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 29 March 2012 03:24 AM

    இது எல்லாம் நடக்கும் என்று எங்களுக்க்கு முன்னரே தெரியும்.

    Reply : 0       0

    சிறாஜ் Thursday, 29 March 2012 03:27 AM

    உங்கட இந்த உண்மையை நம்பிட்டோம்.

    Reply : 0       0

    jazeel mohamed Thursday, 29 March 2012 05:48 PM

    இது அக்கரைபத்து இல்லை குடியிருப்பு

    Reply : 0       0

    akp Thursday, 29 March 2012 11:43 PM

    பாவம் நண்பர்கள் ....... பெயர் பலகையை வைத்து நம்பி விட்டார்கள் ....... அது குடியிருப்புக்குரியது என்று தெரியாதோ ......

    Reply : 0       0

    mr.Janeefer Friday, 30 March 2012 11:04 PM

    @AKP
    குடியிருப்பு என்பது Official நேம் அல்ல. akkaraipattu pradeshiya sabha என்பது தான் Official நேம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .