2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அட்டப்பள்ளத்தில் வாகன விபத்து

Menaka Mookandi   / 2012 மார்ச் 28 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதி, அட்டப்பள்ளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த கன்டர் ரக வாகனமொன்று பாதையை விட்டு விலகிய கால்வாய் ஒன்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று புதன்கிழமை பிற்பகல் கல்முனையிலிருந்து ஒலுவில் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த போதே மேற்படி வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் வாகனத்துக்குச் சிறியளவு சேதமேற்பட்ட போதும், எவரும் ஆபத்தான காயங்களுக்குட்படவில்லை.

விபத்துக்குள்ளான வாகனம் பாரந்தூக்கும் இயந்திரத்தின் உதவியுடன் பின்னர் மீட்கப்பட்டது. அண்மைக் காலமாக, கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் அதிகளவான வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி வீதியானது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் காபட் வீதியாக மாற்றப்பட்டது. இதன் காரணமாக இவ்வீதியால் செல்லும் வாகனங்கள் மிக வேகமானப் பயணிப்பதே பாரியளவில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான பிரதான காரணம் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0

  • dx Thursday, 29 March 2012 08:03 AM

    ஏன்? காபட் வீதி என்றால் நல்லது தானே .......அதற்கு நல்ல வீதி கட்டுபாடுகள் உண்டல்லவா ??

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .