2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அம்பாறை வயல்களில் ஒட்டுக்கள், வைக்கோல் எரிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Menaka Mookandi   / 2012 மார்ச் 29 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தில் உள்ள வயல் நிலங்களில் உள்ள ஒட்டுக்கல் மற்றும் வைக்கோல்களை விவசாயிகள் எரிக்கவேண்டாம் எனவும் அதனை மீறி செயல்படுவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன் தெரிவித்தார்.

இலங்கையில் அதிகளவில் நெல் வேளாண்மை செய்கை பண்ணப்பட்டு வரும் ஒரு மாவட்டமாக அம்பாறை மாவட்டம் இருந்து வருகின்ற போதும் கூடுதலான விவசாயிகள் வேளாண்மை அறுவடை முடிந்தபின் அடுத்த வேளாண்மைக்காக வயலில் உள்ள ஒட்டுக்கள், வைக்கோல்களை எரித்துவருகின்றனர்.

இதனால் மண்ணில் உள்ள பற்றீரியாக்கள் அழிகின்றன. இதனால் நெல் விளைச்சல் குறைவடைகின்றது. எனவே ஒட்டுக்கள், வைக்கோல்களை மண்ணால் மூடி பண்படுத்துவதனால் இவை நல்ல பசளையாகின்றன.

எனவே இதைவிடுத்து எரிப்பதனால் சுற்றுச் சூழல் மாசடைவதுடன் நெல் விளைச்சலுக்கான பற்றீரியா இல்லாமல் போகின்றது. விவசாயிகள் இவற்றை கருத்தில் கொண்டு இந்த எரிக்கும் நடவடிக்கையை கைவிடவேண்டும் இதனை மீறி எரிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • easternbrother Friday, 30 March 2012 01:55 AM

    very good move sir. ARREST IMMEDIATELY THOSE WHO DESTROY THESE LANDS BY SET FIRING. TEACH THESE THINGS TO THE PUBLIC TOO... ADVANCED CONGRATULATIONS......... SIR....... KEEP IT UP.

    Reply : 0       0

    A.Riyas Wednesday, 04 April 2012 04:53 AM

    சொல்ல வேண்டியதை மக்களுக்கு செய்து காட்டுங்க ராசா!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .