2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கல்முனை மாநகர சபைக்காக பிக்கப் வாகனம் கொள்வனவு

Super User   / 2012 மார்ச் 29 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


கல்முனை மாநகர சபையின் தேவைக்காக பிக்கப் வாகனமொன்று சபையினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த பிக்கப் வாகனத்தை கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியிடம் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இதன்போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்த பிக்கப் வாகன தேவையானது கல்முனை மாநகர சபையில் நீண்ட காலமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, திண்மக் கழிவகற்றும் செயற்பாட்டை சீராக மேற்கொள்வதற்காக கல்முனை மாநகர சபைக்கு மேலும் ஒரு ப டெக்டர் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த டெக்டரினை கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியிடம் கையளித்தார்.





You May Also Like

  Comments - 0

  • pasha Thursday, 29 March 2012 09:44 PM

    இனியென்ன சவாரி தான்

    Reply : 0       0

    AHAMED JUNAID Thursday, 29 March 2012 11:17 PM

    இதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். மக்களுக்கு அத்தியாவசிய தேவை எதுவென்று மேயர் புரிந்துவிட்டார்.

    Reply : 0       0

    kkm Thursday, 29 March 2012 11:33 PM

    முன்னைய நிருவாகங்கள் வாகனங்களை நன்கொடையாகப் பெற்றன. இவர் மாநகர நிதியை செலவழித்து இதனை வாங்கிவிட்டு இத்தனை ஆரவாரம்?

    Reply : 0       0

    meenavan Friday, 30 March 2012 01:37 AM

    வாகன கொள்வனவு நிதி மாநகர சபை நிதியா? ஆளுநர் நிதியா? எதுவாக இருந்தாலும் சிலு சிலுப்பு படங்களுடன் வெளியானாலும், பணியாரம் மக்களை சென்றடைய வேண்டும்.

    Reply : 0       0

    m.i.samsudeen Friday, 30 March 2012 03:05 AM

    நற்பிட்டிமுனை முபீத், நபார் இவர்களும் ஆளும் கட்சி கணக்கா?

    Reply : 0       0

    kmc Friday, 30 March 2012 03:35 AM

    இந்த செய்திக்கு றிப்போட்டர் யாரோ?

    Reply : 0       0

    kalam Friday, 30 March 2012 03:39 AM

    நானும் அரசியல்வாதி என்றால் என்னுடைய காரியாலயத்திலிருந்தும் செய்திகளை இ - மெயில் செய்தால் நீங்கள் பிரசுரிப்பீர்களா?.

    Reply : 0       0

    m.i.samsudeen Friday, 30 March 2012 04:08 AM

    செய்தி உண்மை என்றால் ரிப்போர்ட்டர் அவசியமில்லை. நீங்கள் எழுதுவது மட்டும்தானா செய்தி.

    Reply : 0       0

    Rahman Friday, 30 March 2012 05:33 AM

    மக்களின் வரிப் பணத்தை வீணாக்காமல் ஏதாவது நல்லது செய்யுங்கள். பாவம் அந்த மசூர் மௌலானா, தனது முதுமையையும் பாராது எத்தனையோ தடவை திறைசேரியின் படி ஏறி முத்திரை நிதியை சேர்த்து வச்சிட்டு போனார்.

    Reply : 0       0

    rozan Friday, 30 March 2012 09:06 AM

    டிப்பெருக்கும் பிக்கபுக்கும் ஏன் வித்தியாசம்?

    Reply : 0       0

    Hathee Friday, 30 March 2012 03:26 PM

    அஹமத் சுனைத் நீங்க கடும் புத்திசாலித் தனமாக கேட்டிருக்கீங்க.

    Reply : 0       0

    aslam Friday, 30 March 2012 04:11 PM

    தெருமின் விளக்கு பொருத்தும் ஊழியர்கள் ஏணி, லைட், ஆயுதங்கள் போன்றவற்றை முதுகில் வைத்துக் கொண்டு சைக்கிலில் சென்று ஒரு நளைக்கு குறிப்பிட்ட சில தெருமின் விளக்குளை பொருத்தினால் போதும் போல.... துரிதப்படுத்த வாகனம் வாங்கினால் அதிலும் விமர்சனம். எதைச் செய்தாலும் குறைகாண்பதறகென்றே ஒரு கூட்டம்... ம்....ம்....ம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .