2025 ஜூன் 26, வியாழக்கிழமை

'மக்களுக்கு நன்மை செய்ய முடியவில்லை என்றால் அரசாங்கத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் விலக வேண்டும்'

Super User   / 2012 மார்ச் 29 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


"ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்காகவோ, அல்லது அவர்கள் - அரசாங்கத்திலிருந்து கொண்டு தமது தொழில்களை விருத்தி செய்வதற்காகவோ - முஸ்லிம் காங்கிரஸுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை.

இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதனூடாக தமக்கு வாக்களித்த மக்களுக்கு நன்மைகள் எதனையும் செய்ய முடியவில்லை என்றால் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையும், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும்.

இந்த வேண்டுகோள் அலட்சியம் செய்யப்படக் கூடாது. அவ்வாறு அலட்சியம் செய்யப்படுவதனூடாக, எமது கட்சித் தலைமைக்கு எதிராக - நாங்கள் செயற்படக் கூடியதொரு ஆபத்தான நிலை வந்து விடக் கூடாது".

இவ்வாறு அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளரும் 'ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினருமான எம்.ஏ. அன்ஸில் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் சபைக் காரியாலயத்தின் கூட்ட மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, உதவித் தவிசாளர் அன்ஸில் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

"அட்டாளைச்சேனை 75 வீதம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களைக் கொண்டதொரு பிரதேசமாகும். ஆனால், இந்த பிரதேசத்துக்கான அபிவிருத்திக் குழுத் தலைவராக மு.காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிக்க இதுவரை நமக்கு முடியவில்லை.

இதுமட்டுமல்ல, பொருளாதார அமைச்சினூடாக 'கமநெகும' அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 'ஒரு கிராமத்துக்கு ஒரு வேலை' எனும் செயற்திட்டமொன்று தொடங்கப்பட்டது. இதற்கமைய பிரதேச சபை உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு வேலைத் திட்டத்தினை மேற்கொள்வதற்கான அனுமதி கிடைத்ததோடு, அதற்குரிய நிதியாக 10 இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த திட்டத்தினை ஆரம்பிக்கும் போது – அது தொடர்பான ஒரு பதாகையினை மக்களின் பார்வைக்குக் காட்சிப்படுத்துமாறு நம்மிடம் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, அந்தப் பதாகையில் ஜனாதிபதியினதும், அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினதும் புகைப்படங்களை வெளிப்படுத்துமாறு நமக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டது.

அதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதேவேளை, நாம் - முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் எனும் வகையில் அந்தப் பதாகையில் எமது கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களினதும், தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீமினதும் படங்களையும் சேர்த்துக் காட்சிப்படுத்தியுள்ளோம்.

ஆனால், அந்தப் பதாகையில் அமைச்சர் அதாவுல்லாவின் புகைப்படத்தை உள்ளடக்க வேண்டும் என்றும், அவ்வாறில்லாவிடின் எமக்கு வழங்கப்பட்ட செயற்றிட்டத்துக்கான 10 இலட்சம் ரூபா நிதி நிறுத்தப்பட்டு விடும் என்றும் அறிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களை மிக அதிகமாகக் கொண்டதொரு பகுதியில், முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்கள் செயற்படுத்தும் திட்டங்களுக்கான பதாதைகளில், முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் எதிராளி ஒருவரின் புகைப்படத்தினை சேர்த்துக் கொண்டால் மட்டுமே உங்களுக்கான நிதியினை வழங்குவோம் என்று இந்த அரசாங்கத்தினால் கூறப்படுகிறது. இத்தனைக்கும் நமது கட்சியின் தலைமையும் இந்த அரசாங்கத்தில்தான் அமைச்சராக உள்ளார்.

அமைச்சர் பஷில் தருகின்ற 10 லட்சம் ரூபாவுக்கு சோரம் போகும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் இல்லை. குறித்த பதாதைகளில் அமைச்சர் அதாவுல்லாவின் புகைப்படத்தினை இணைத்தால் தான் எமக்கான நிதி வழங்கப்படும் என்கிறதொரு நிலை ஏற்படுமானால், அந்த நிதி எமக்குத் தேவையில்லை என்பதை நான் இந்த இடத்தில் திட்டவட்டமாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கடந்த மாதம் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது – முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்தினை  பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் அழைக்கப்படவுமில்லை, அவர்களுக்கு எந்தவிதமான நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்படவுமில்லை. இப்படி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ போன்றவர்களால் நாம் நிறையவே ஓரங்கட்டப்படுகிறோம்.

எனவே, இவைகளையெல்லாம் பொறுத்துக் கொண்டு இன்னும் இந்த அரசில் அங்கம் வகித்துக் கொண்டிருப்பதில் எந்தவிதப் பயனும் கிடையாது. இந்த ஆட்சியில் இணைந்திருப்பதால் நமது மக்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லையென்றால், முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவமும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அரசிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும்.

கடந்த 12 வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியில் தான் இருந்தது. அதற்காக - மக்கள் எம்மை நிராகரிக்கவுமில்லை, எமக்கு வாக்களிக்காமல் விடவுமில்லை. ஆனால், ஆளும் தரப்பில் அமைச்சுப் பொறுப்புக்களை எடுத்துக்கொண்டு நாம் இருக்கின்ற நிலையில் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்றால், பிறகு எதற்காக நாம் ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?

முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகுமானால் அது மு.காங்கிரசின் அரசியல் எதிராளிகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகளுக்கும் சந்தோசத்தினையும், குதூகலத்தையும் ஏற்படுத்தும் என்பதையும் நாம் அறிவோம். அதற்காக, அர்த்தங்களின்றி அரசோடு ஒட்டிக் கொண்டிருக்கவும் முடியாது!

அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணை ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட போது, முஸ்லிம் காங்கிரஸின்; தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்து ஆதரவாகச் செயற்பட்ட விதம் குறித்து இந்த உலகே அறியும்.

ஆனால், அவ்வாறு செயற்பட்டும் கூட – முஸ்லிம் காங்கிரஸுக்குரிய அந்தஸ்;த்து இந்த அரசில் இன்னும் வழங்கப்படவேயில்லை என்பது கவலைதரும் விடயமாகும். எனவே, இந்த அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடனடியாக வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த வேண்டுகோள் அலட்சியம் செய்யப்படுவதனூடாக, முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு எதிராக - நாங்கள் செயற்படக் கூடியதொரு ஆபத்தான நிலை வந்து விடக்கூடாது" என்றார்.


You May Also Like

  Comments - 0

  • mr.Janeefer Friday, 30 March 2012 10:56 PM

    எல்லோரும் சற்று வெயிட் பண்ணுங்க. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தனது அபிவிருத்தி பயணத்தை இன்னும் சில நாட்களில் தொடர இருக்குறது.
    so give your hands together for our new journey.

    Reply : 0       0

    Ahamed Askar Friday, 30 March 2012 03:44 PM

    அன்சில் உங்களுக்கு இப்பதான் புரிந்துள்ளது முஸ்லிம் காங்கிரஸ் உண்மை நிலை. அல்ஹம்துலில்லாஹ். அதா எப்பவோ சொல்லிவிட்டார். இனியாவது புரிந்து கொள்ளுங்கள் மக்காள், அமைச்சர் அதாவின் பவர் எப்படி என்று. உண்மை வெல்லும்!

    Reply : 0       0

    Saboor Adem Friday, 30 March 2012 04:32 PM

    சகோதரரே! கட்சி ஒரு வேதம் அல்ல, இன்று இருப்பது ஒரு கலிபா ஆட்சியும் இல்லை, இஸ்லாமிய அரசியல் வாதிகளும் இல்லை. மக்களுக்கு உதவி கிடைக்கும் என்றால் அதாவுல்லாவின் போட்டோவை சேர்த்து விடுங்கள். அதாவுல்லா முஸ்லிம்களின் எதிரியும் அல்ல. நேற்று முஸ்லிம் காங்கிரஸில் இருந்தவர்கள், இன்று இல்லை. இன்று இருப்பவர்கள் நேற்று வேறு ஏதே ஒரு கட்சியில் இருந்தவர்கள். வீண் விராப்புகளை விட்டுவிட்டு, முடியுமானவரை மக்களுக்கு ஏதாவது செய்யப் பாருங்கள்.

    Reply : 0       0

    Loving National Congress Friday, 30 March 2012 05:18 PM

    அன்சில் தவிசாளர் ஆகி இருந்தால் இப்படி சொல்லி இருக்க மாட்டார். பிரதேச சபை உறுப்பினர் தானே இவ்வாறு தான் பேசுவார். ஒன்றும் கவலை பட தேவை இல்லை. அதாஉல்லாஹ் தான் உங்கள் அபிவிருத்தி குழு தலைவர்.

    Reply : 0       0

    mohamed Friday, 30 March 2012 05:34 PM

    தம்பிமாரே ஒரு போட்டோவை காரணம் காட்டி ஏழு மில்லியனை உதாசீனம் செய்யும் அரசியல் சாணக்கியமும் மக்கள் சேவையும் பாராட்டுக்குரியது. இதுதான் வரட்டுக் கௌரவமோ?

    Reply : 0       0

    MOHAMMED Friday, 30 March 2012 05:42 PM

    ஐயா அன்சில் இது போல எத்தன தடவ சேர்ந்து ப்ரிஞ்சிடோம். எதற்கும் சாணக்கியம் வேண்டும். அப்படி என்றால் அமரிக்காவையும் வெல்லலாம்.

    Reply : 0       0

    simaas Friday, 30 March 2012 05:47 PM

    சபாஷ் தொடரட்டும் உங்கள் மக்கள் பணி.

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 30 March 2012 07:12 PM

    முஸ்லீம் காங்கிரஸ் சேவை செய்யா விட்டாலும் பரவாய் இல்லை எனது பகைப்படத்தை போடத்தான் வேண்டும் என்று சிலர் அலைவதும் மக்களுக்குத் தெரியும்.

    Reply : 0       0

    M.A.A.Rasheed Friday, 30 March 2012 08:57 PM

    ஆம் நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.

    Reply : 0       0

    abdul Friday, 30 March 2012 09:37 PM

    அன்சில் முஸ்லிம் சமுகதைப்பற்றி சிந்திக்கின்ற முஸ்லிம் மக்களுக்கு சேவை செய்கிற தேசிய காங்கிரஸ் தலைவர் அமைச்சர் அதா உல்லாவைப்பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை தாங்கள் அரசியலில் சின்னவர் ஆனால் அமைசர் அதா அரசியலில் சானாக்கியமானவர்.

    Reply : 0       0

    MUHAMMAD Friday, 30 March 2012 03:25 PM

    தம்பி அன்சில் தம்பி நபீல் இன்னும் கொஞ்சம் ஊண்டி சத்தத்தை நல்லா போடுங்க, சனத்துகள்ள காதில படட்டும். மக்களை எல்லா நாளும் ஏமாத்ததீங்க வார போத்துத்தேர்தல்ல அவங்க நல்லா வாங்கி கட்டுவாங்க. கொஞ்சம் பொறுத்து இரிங்க. தம்பி தலைமை பதவிய ராஜினாமா செய்ய சொல்லுங்க. அன்சில் தம்பி பாரம் எடுங்க ஒன்களுக்கிட்ட நல்ல ஆளமை இறுக்கி. நீங்க செய்வீங்க தம்பி. நன்றி

    Reply : 0       0

    nawas Saturday, 31 March 2012 12:31 AM

    முஸ்லிம் கொங்கிரசினால் இலங்கை முஸ்லிம்கள் பயன் பெறவில்லை. அஷ்ரப் அவர்களுடன் முடிந்துவிட்டது.

    Reply : 0       0

    N.Fowzer.pottuvil Saturday, 31 March 2012 03:07 AM

    kalam kadantha muyatsi payanalikkathu.

    Reply : 0       0

    N.Fowzer.pottuvil Saturday, 31 March 2012 03:17 AM

    காலம் கடந்த முயற்சி பயனளிக்காது

    Reply : 0       0

    abdul Saturday, 31 March 2012 05:28 AM

    கட்சி கட்சி என்று வீராப்பு பேசுவதனால் மக்களுக்கு எதையும் செய்யமுடியாது என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் அரசைவிட்டு விலகாது.

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Saturday, 31 March 2012 06:54 PM

    இப்படி தைரியம் எல்லாரிடமும் வரவேண்டும். மக்களுக்கு நல்லது செய்யாத எவரும் எங்களுக்குத்தேவை இல்லை. நல்ல கருத்து.

    Reply : 0       0

    KS Sunday, 01 April 2012 05:13 AM

    ஏன் ஐயா இந்த வரட்டு கவ்ரவம்? ஒலுவில் பல்கலைகழகதிற்க்கு அருகில் செல்லும் கிரவல் வீதி புனரமைக்கபட்டு அங்கு பிரதான வீதியோரமாக வைக்கபட்டுள்ள பதாகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீமினதும், அமைச்சர் அதாவுல்லாவினதும், தவிசாளர் நசீர் னதும் படங்களையும் ஒன்றாக சேர்த்து தானே காட்சிப்படுத்தியுள்ளீர்.... ஆனால் இப்போது மட்டும் எங்கிருந்து இந்த........

    Reply : 0       0

    Shams Sunday, 01 April 2012 05:02 PM

    இங்கு நாம் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய விடயம் அபிவிருத்தி அன்றி வேறு ஒன்றுமில்லை . வீராப்பு பேசுவதனால் மக்களுக்கு எதையும் செய்யமுடியாது. அதாஉல்லாஹ்தான் உங்கள் பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் என்று இருப்பின் வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். யார் குத்தினாலும் அரிசியானால் சரிதான் . அதுதான் தற்போதைய நிலைப்பாடு .
    "சேருங்கள் இல்லையேல் நாங்கள் சேர்ந்துவிடுவோம் என்றீர்கள். இப்ப பிரியுங்கள் இல்லையேல் நாங்கள் பிரிந்துவிடுவோம் என்கிறீர்கள்". தலைமை பாவம் அல்லவா? என்ன நியாயம???????

    Reply : 0       0

    MI. Rifan Sunday, 01 April 2012 06:29 PM

    பொறுத்தது போதும் பொங்கியழு தோழா.

    Reply : 0       0

    ANEES Sunday, 15 April 2012 08:21 PM

    உங்கள் கருத்து முற்றிலும் உண்மை இதேபோன்று எல்லா உறுப்பினர்களும் செயற்பட்டால் நம் கட்சிக்கு பல வெற்றிகள் வந்து சேறும்.
    மற்றும் எமது கட்சியின் தலைவர் அவர்கள் இதனை புரிந்து கொண்டு ஏற்று நடப்பாராயின் நமது கட்சி வளம் பெறும். எம்.ஏ.அன்சில் அவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்.

    Reply : 0       0

    sharmee Friday, 30 March 2012 04:46 AM

    எல்லாரும் எல்லாம் பேசலாம் . உங்களுடைய செயலில் காட்டுங்கள் .

    Reply : 0       0

    m.i.m.infas,puttalam. Friday, 30 March 2012 01:33 AM

    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை, கவனம் கட்சியை விமர்சித்தீர் என்று உங்களை.....?

    Reply : 0       0

    nawas Friday, 30 March 2012 01:52 AM

    இந்த வார்த்தைகளே நீங்கள் தலைவருக்கு வைக்கும் ஆப்பு தான்.

    Reply : 0       0

    easternbrother Friday, 30 March 2012 01:52 AM

    யப்பா...அன்சிழு.......நம்ம " அதாவ " எதித்து உங்களால் என்னதான் செய்ய முடியும் >? அடக்கி வாசிப்பா....

    ? அடக்கி வாசிப்பா....')">Reply : 0       0

    Maruthooraan Friday, 30 March 2012 02:19 AM

    மக்களின் ஆதங்கத்தை தெரிந்தவனே மக்கள் தொண்டன்... சரியான கருத்தையே கூறியுள்ளீர்கள்... அரசாங்கத்துக்கு கரிவேப்பிலயகவும் கூஜா தூக்கிகளுக்கு தலை வணங்கவும் ஆரம்பிக்கப் பட்ட கட்சி அல்ல இது...

    Reply : 0       0

    சிறாஜ் Friday, 30 March 2012 02:22 AM

    சபாஷ் துணைத் தவிசாளரே முஸ்லீம் காங்கிரஸ் என்பது வங்குறோத்து கட்சி இல்லை என்பதனை திடமாக எடுத்துக் கூறியமைக்கு நன்றி. இப்படி தைரியம் எல்லாரிடமும் வரவேண்டும். சும்மா கதிரைகளைச்சூடாக்கிட்டு இருக்க வேண்டிய அவசியம் முஸ்லீம் காங்கிரஸ் எம்பி மாருக்குத்தேவை என்றால் அவர்களை வெறுத்து ஒதுக்க நாங்கள் தயார். மக்களுக்கு நல்லது செய்யாத எவரும் எங்களுக்குத்தேவை இல்லை. நல்ல கருத்து. அதாவுல்லாவின் புகைப்படம் போடும் அளவுக்கு நாங்கள் ஒன்றும் கேவலமானவர்கள் இல்லை என்னும் கூற்றுக்கு நன்றி நன்றி நன்றி.

    Reply : 0       0

    ummpa Friday, 30 March 2012 02:24 AM

    ஏன் சிலைகளை வையுங்கள். ஏன் சண்டை எல்லாருடைய படத்தையும் போடுங்கள். முடிந்தால் அரசமரத்தையும் வையுங்கள். தயவு கூர்ந்து மறைந்த தலைவர் படத்தை போடாதீர்கள். அதுவே அவருக்கு நாம் செய்கின்ற கைமாறாகும்.

    Reply : 0       0

    fayas Friday, 30 March 2012 02:28 AM

    அன்சில் நானா மிக நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள். நன்றி .

    Reply : 0       0

    vaanmoli Friday, 30 March 2012 03:05 AM

    போட்டாரே ஒரு போடு !

    Reply : 0       0

    janoovar Friday, 30 March 2012 03:25 AM

    பிரதி தவிசாளர் அவர்களே நீங்கள் இதனை எப்போது செய்திருக்க வேண்டும்.

    Reply : 0       0

    min from qatar Friday, 30 March 2012 01:26 AM

    நல்லதொரு கருத்து! அன்சில் உண்மையை பேசுவதற்கு தயங்க வேண்டாம். முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் எதற்கும் அஞ்சியவர்கள் இல்லை என்பது தலைவருக்கு தெரியும். தலைவர் அவர்கள் அவதானத்துடன் செயல்படவேண்டும்! அதுமட்டுமல்லாமல் அட்டளைச்சேனை பிரதேசம் முஸ்லிம் காங்கிரஸ் வசம் செயல்பட வேண்டுமாயின் இதற்கு உடனடியாக தீர்வுகாண வேண்டும் அல்லாஹு அக்பர்!!!!!!

    Reply : 0       0

    raja Friday, 30 March 2012 05:40 AM

    சபாஷ் , முஸ்லிம் காங்கிரசை வளர்ப்பது , முஸ்லிம் காங்கிரசின் தலைமையோ அல்லது முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்களோ அல்ல , மாறாக அதன் ஊழியர்கள்தான் என்பதை அரசாங்கமும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை பீடமும் புரிந்து கொள்ள வேண்டும்.

    Reply : 0       0

    nawfal Friday, 30 March 2012 06:55 AM

    சரியான தருணத்தில் உங்கள் கருத்து வந்திருக்கின்றது. சபாஸ்..

    Reply : 0       0

    rozan Friday, 30 March 2012 08:57 AM

    இப்படி கபடி விளையாடி மக்களுக்கு ஒன்னும் பண்ணது ஆக்கிவிடுங்கள்? அவர்கள் உங்களுக்கு இன்னமும் வாக்குகள் அளித்து அழிந்து விடுவார்கள்...

    Reply : 0       0

    jabbar Friday, 30 March 2012 09:20 AM

    சேருங்கள் இல்லையேல் நாங்கள் சேர்ந்துவிடுவோம் என்றீர்கள்.இப்ப பிரியுங்கள் இல்லையேல் நாங்கள் பிரிந்துவிடுவோம் என்கிறீர்கள். என்ன நியாயம் அன்சில் சற்று யோசியுங்கள்.

    Reply : 0       0

    meenavan Friday, 30 March 2012 01:52 PM

    அன்சீல் நீங்கள் எது கூறினும் "சட்டியுடன் போனது பிலால் மாற்றம்" அது தான் நிதர்சனம்,சமூக உணர்வுகளை விட பதவியும் ,படாடோபமும் நமது பிரதிநிதிகளின் கண்களை மூடியுள்ளதை மறுக்கமுடியாது.

    Reply : 0       0

    pasha Friday, 30 March 2012 02:27 PM

    அரசாங்கத்துக்கு தேவை பதினெட்டாம் திருத்தம். அதை கறி வேப்பிலை பாவிப்பதை போல் முஸ்லிம் காங்கிரஸை பயன்படுத்தி அரசாங்கம் கச்சிதமாய் முடித்து விட்டது. இனி இவர்கள் இருந்தால் என்ன போனால் என்ன.

    Reply : 0       0

    ooraan Friday, 30 March 2012 03:03 PM

    சகோதரர் அன்சில் ....நீங்கள் கூறியது முற்றிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது ..........

    Reply : 0       0

    Hathee Friday, 30 March 2012 03:22 PM

    நீங்க தனி நாடு நடத்துவதுபோல நினைத்துக்கொண்டு முட்டாள் தனமாக பேசி கிடைக்கும் சின்ன உதவிகளையும் கெடுக்க வேண்டாம். அரசாங்கம் தரும் பட்டதாரி நியமனமும் வேண்டாம் என்று ஒரு அறிக்கையும் விடுங்க. அடையும் உங்க கட்சிக்காரர்கள் ஆதரிப்பார்கள். தலைவர் அரசாங்கத்தை விட்டு விலகா விட்டால் நீங்க கட்சிய விட்டு விலகுவீங்களா? உங்களுக்கு உங்கட ஊர் மட்டும்தான் உலகம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .