2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வட – கிழக்கு ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை அம்பாறையில் திறப்பு

Menaka Mookandi   / 2012 மார்ச் 30 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

 
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசசெயலப் பிரிவிற்கு உட்பட்ட சின்னப்பாலமுனையில் பாரியளவில் அமைக்கப்பட்ட லங்கா வடக்கு - கிழக்கு 'ஐஸ்' உற்பத்தித் தொழிற்சாலையினை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.
 
இத்தொழிற்சாலை மூலம் முக்கியமாக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச கடற்தொழிலாளர்களின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்  என எதிர்பார்கப்படுகின்றது.
 
இங்கு ஒரு நாளைக்கு 25,000 கிலோ கிராம் ஐஸ் உற்பத்தியினை மேற்கொள்ள முடிவதுடன் இப்பிரதேசத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
 
இந்நிகழ்வில் அதிதிகளாக ஜெஸ்கா நிறுவனத்தின் தலைவர் ஐ.எல்.எம்.ஹாஸிம் மதனி, தொழிலதிபர் ஏ.எல்.ஜஃபர், கல்முனை ஹற்றன் நெஷனல் வங்கியின் முகாமையாளர் எம்.எல்.அன்வர்டீன் உட்பட பிரமுகர்கள் மற்றும் பிரதேச கடற்றொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0

  • nalanvirumbi Friday, 30 March 2012 10:48 PM

    நல்ல முயற்சி. பயன் பெறட்டும் மீனவ சமூகம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .