2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ஆழ்கடல் மீன்பிடிக்கான படகுத்துறைமுகம் இன்மையால் அம்பாறை மீனவர்கள் சிரமம்

Menaka Mookandi   / 2012 மார்ச் 30 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)


அம்பாறை மாவட்டத்துக்கு உட்பட்ட காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை போன்ற பிரதேசங்களிலிருந்து ஆழ்கடல் மீன்பிடித் தொழிலுக்காகச் செல்லும் மீனவர்கள், தங்களது மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கான படகுத்துறைமுகம் ஒன்று இல்லாததினால் பெரும் சிரமங்களுக்கும், துன்பங்களுக்கும் உள்ளாவதாக குறிப்பிடுகின்றனர்.

படகுத் துறைமுகமொன்று இன்மையால் நாளாந்தம் தங்களது இயந்திரப் படகுகளுக்கான எரிபொருட்கள், ஐஸ் போன்ற அவசியப்பொருட்களை வள்ளங்கள் மூலம் நாளாந்தம் கொண்டு செல்லவேண்டி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

எனினும் சுமார் 30வருட காலங்களாக ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக சாய்ந்தமருது தோனா என்னும் இடத்தில் படகுத்துறை அமைத்து தருவதாக அரசியல் பிரமுவர்கள் வாக்குறதிகளை தொடர்ச்சியாக வழங்கிய போதிலும் இன்றுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாமை தங்களுக்கு வேதனை அளிப்பதாக இம்மீன்பிடித் தொழிலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக அம்பாறை மாவட்ட கரையோர ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர் சங்கத் தலைவர் எம்.எஸ்.ஏ.நஸீர் தெரிவிக்கையில்,

'1982ஆம் ஆண்டு முதல் இன்று வரையும் முன்னாள் அமைச்சர்கள் தொடக்கம் தற்போதைய அமைச்சர்கள் வரை சாய்ந்தமருதில் படகுத் துறைமுகத்தை அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வுகளை நடாத்தியுள்ளனர். ஆனால் இன்றுவரை துறைமுக நிர்மாண நடவடிக்கைகள் நடைபெறவில்லை. இதற்காக வெளிநாடுகளும் நிதி உதவிகளை வழங்கி உள்ளதாகவும் அறிகின்றோம்.

படகுத்துறைமுகம் ஒன்று இல்லாததினால் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலாளர்களான நாங்கள் நவம்பர் தொடக்கம் பெப்ரவரி மாதம் வரையான கடல்கொந்தளிப்பு காணப்படும் காலப்பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை காணப்படுகிறது.

இக்காலங்களில் சிறிய வள்ளங்கள் மூலம் அத்தியவசியப் பொருட்களை இயந்திரப்படகுகளுக்கு கொண்டுசெல்லும் போது படகுகளும் பொருட்களும் சேதமடைவதுடன், உயிர்ச்சேதங்களும் ஏற்படுகின்றன. அதுமட்டுமன்றி இத்தொழில் மூலம் தமது அன்றாட வாழ்வாதாரத்தைப் போக்கும் சுமார் ஐயாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.

மேலும் எங்களது தொழிலாளர்கள் சிறு வள்ளங்களில் சென்றே இயந்திரப்படகுகளில் தொழிலுக்காக செல்கின்றனர். இதனால் அவர்களின் உடல் உழைப்புக்களும் வீனடிக்கப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்திலே மீன்பிடித்தொழிலின் ஊடாக அதிக வருமானத்தை ஈட்டும் பிரதேசம் எங்களது பிரதேசமேயாகும் என்பதை இந்நாட்டிலுள்ள அனைவரும் அறிவர்.

எனவே பொறுப்புவாய்ந்த அரசியல் பிரமுகர்களும், அதிகாரிகளும் எங்களது படகுத் துறைமுகத் தேவையை நிவர்த்தி செய்ய துரிதமாக முன்வரவேண்டும்' என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • raj Friday, 30 March 2012 11:47 PM

    நான் அறிந்தவரை பல அமைச்சர்கள் இதற்கு ஆரம்ப நிகழ்வுகளை நடத்தி உள்ளனர் . அப்ப இங்க என்ன நடக்குது . இதை கேட்க்க எவரும் இல்லையா ? இந்த மக்களுக்கு முடிவுதான் என்ன?

    Reply : 0       0

    rizviya khan Saturday, 31 March 2012 01:17 AM

    அதற்கு வைக்கப்பட்ட கற்களை சேர்த்தால் ஒரு துறைமுகம் கட்டலாம்.

    Reply : 0       0

    pasha Saturday, 31 March 2012 04:28 AM

    அமைச்சர் மன்சூர் காலத்தில் இருந்து இதற்கு கல் வைக்கத அமைச்சரே இல்லை.

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Saturday, 31 March 2012 04:44 PM

    இவங்க ஒருத்தரும் ஒன்னும் பண்ண மாட்டாங்க .
    இதுக்கு நாம்தான் சரியான பதில் கொடுக்கணும் .சிந்திங்க மக்கள் சிந்திங்க.

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Saturday, 31 March 2012 04:51 PM

    மக்கள் நான் ஒன்னு மட்டும் சொல்றன் இனி நமக்கு அபிவிருத்தி பண்ணுபவர்களை மட்டும் சாய்ஸ் பண்ணுங்க. இது நம்ம கட்சி என்று எதையும் பார்க்க கூடாது. பார்த்தால் மீண்டும் நாம்தான் யாமற்ற படுவம்.

    Reply : 0       0

    ***மல்லிகை சிராஜ்***siro Saturday, 31 March 2012 06:56 PM

    மக்களுக்கு நல்லது செய்யாத எவரும் எங்களுக்குத்தேவை இல்லை.

    Reply : 0       0

    AHAMED JUNAID Monday, 02 April 2012 02:31 AM

    தேர்தல் ஒன்று வந்தால் மட்டுமே அரசியல்வாதிகளின் மேடைகளில் இக்கதை பெரிதாக எடுபடும். அதுவரைக்கும் கிடப்பில்தான் இருக்கும். மீனவர்கள் புரிந்தால் சரிதான்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .