2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சமயா சமய மற்றும் மாற்று நிலை அடிப்படையில் சேவையாற்றியவருக்கு நிரந்தர நியமனம்

Kogilavani   / 2012 மார்ச் 31 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}



(அப்துல் அஸீஸ்)


கல்முனை மாநகர சபையில் சமயா சமய மற்றும் மாற்று நிலை அடிப்படையில் நீண்ட காலமாகவும், குறுகிய காலமும் கடமையாற்றிய 16 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றது.

கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி, மாநகர சபை பொறியியலாளர் ஏ.ஜே.ஜௌசி, மாநகர சபை கணக்காளர் எல்.சி.சாலித்தீன்,  மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.பறக்கத்துள்ளா, ஏ.எம்.பிர்தௌவ்ஸ், ஏ.அமீர் உட்பட மாநகர சபை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, 16 ஊழியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .