2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கல்முனை மாநகர முதல்வருடன் வர்த்தக சம்மேளனத்தினர் சந்திப்பு

Kogilavani   / 2012 மார்ச் 31 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை வர்த்தக சம்மேளனத்திற்கும் மாநகர முதல்வருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று கடந்த திங்கட்கிழமை   இரவு முதல்வரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

ஆசியா மன்றத்தின் கிழக்கு மாகாண நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம். வலீதின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சந்திப்பில் கல்முனை வர்த்தக சம்மேளத்தின் தவிசாளர் யூ.எல்.எம். பஸீர், பிரதித் தலைவர் பீ.எம். ஜமால்தீன் ஆகியோருடன் சம்மேளனத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின் போது கல்முனை நகர வர்த்தகர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் மாநகர அபிவிருத்தி தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக வியாபார ஸ்தலங்களுக்கான உறுதி, சோலை வரி, வியாபார உத்தரவுப் பத்திரம் என்பவற்றுடன் கல்முனை மாநகர இரவுநேர, வர்த்தகம் பஸ்தரிப்பு நிலைய கடைகளை பகிர்ந்தளித்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் கல்முனை நகர மண்டபத்தினை புனரமைத்து மக்கள் பாவனைக்கு வழங்குமாரும் வர்த்தக சமூகம் கோரிக்கையினை முன்வைத்தது.

வர்த்தக சமூகத்தின் தேவைகளை நன்கு கேட்டறிந்த மேயர் சிராஸ் மீராஸாஹிப் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் றவூப் ஹக்கீமை சம்மேளனப் பிரதிநிதிகளை சந்திப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதியளித்ததோடு வர்த்தக சமூகத்தின் கோரிக்கைகளை இயன்றவரை நிறைவேற்றுவதாகவும் வாக்குறுதியளித்தார்.

மேயரின் நல்ல செயற்பாடுகளுக்கு கல்முனை வர்த்த சமூகம் என்றும் ஆதரவு வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.






You May Also Like

  Comments - 0

  • Rajabdeen Monday, 02 April 2012 02:41 PM

    கல்முனை மாநகர பிரிவில் சாய்ந்தமருது, கல்முனை தமிழ்,மருதமுனை ஆகிய பகுதிகளிலும் வர்த்தக சங்கங்கள் உள்ளன. இவைகள் முதல்வரை கலந்துரையாடுவதற்கு சந்தர்பம் வழங்கப்பட வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .