2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அபிவிருத்திக் குழுத் தலைவரின் படம் காட்சிப்படுத்தப்படா விட்டால் நிதி வழங்குவதில் சிரமம் ஏற்படும்

Kogilavani   / 2012 மார்ச் 31 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


'ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டம்' எனும் அபிவிருத்தி வேலைகளை ஆரம்பிக்கும் போது காட்சிப்படுத்தப்படும் பெயர் பலகைகளில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் புகைப்படம் சேர்க்கப்படாது விட்டால், குறித்த வேலைத் திட்டத்துக்கான கொடுப்பனவுகளை வழங்க முடியாமல் போகும் என அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம். அஸ்லம் தெரிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் சபையின் மு.காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு உதவித் திட்டமிடல் பணிப்பாளர் அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றிலேயே மேற்கண்ட விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டத்தை' ஆரம்பிப்பதற்கு முன்னர் இதற்கான பெயர்ப் பலகையைத் தயாரித்து அதனை அவ் வேலைத் திட்டத்துக்குரிய இடத்தில் பொருத்த வேண்டும். அதேவேளை, இப் பெயர்ப் பலகையில் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரின் புகைப்படம் கட்டாயம் இருக்க வேண்டும் எனவும் சுற்று நிருபம் மூலம் உங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தங்களால் முன்மொழியப்பட்ட வேலைத்திட்டத்துக்கு நடப்பட்ட பெயர்ப் பலகையில் பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவரின் புகைப்படம் பொருத்தப்படாமல் உள்ளதாக எனக்கு அறியக் கிடைத்துள்ளது.

தங்களுடைய இந்தச் செயற்பாடு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சுற்று நிருபத்தினை மீறியதாக உள்ளது. ஆகவே, சுற்று நிருபத்துக்கு அமைய தயாரிக்கப்படாத பெயர்ப் பலகைக்குரிய வேலைத் திட்டத்துக்கான கொடுப்பனவுகளை தாங்களுக்கு வழங்குவதில் சிரமம் ஏற்படும் என்பதனை மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, தாங்களுக்குரிய வேலைத் திட்டத்துக்கான பெயர்ப் பலகையை சுற்று நிருபத்துக்கமைய உடனடியாக மாற்றியமைத்து இவ் வேலைத் திட்டத்தினை ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவராக அமைச்சர் அதாஉல்லா செயற்பட்டு வருகின்றார். இதன் காரணமாக, முஸ்லிம் காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர்கள் தமக்கு வழங்கப்பட்ட வேலைத் திட்டத்துக்கான பெயர்ப் பலகைகளில் அமைச்சர் அதாஉல்லாவின் புகைப்படத்தைத் தவிர்த்து விட்டு, முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின்  தற்போதைய தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரின் புகைப்படங்களை சேர்த்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

ஒரு கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் 10 லட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு வேலைத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.                                                                                                                                                                                                          

You May Also Like

  Comments - 0

  • riswan Saturday, 31 March 2012 11:49 PM

    அபிவிருத்தி புகைப்படத்துக்கா அல்லது மக்களுக்கா? விளம்பரத்துக்காக நீங்கள் செய்யும் இந்த வேலைகள் சமூகத்தை இன்னும் பிளவுபடுத்தும்...

    Reply : 0       0

    Mulla Sunday, 01 April 2012 04:09 AM

    விளம்பரம் தேவையில்லை என்றால் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீமின் படம் எதற்கு?. அந்த பிரதேச சபையில் தமிழில் வந்த சுற்று நிருபத்தினை கூட வாசிக்க தெரியாதவர்களா உறுப்பினர்களாக இருக்கிறார்கள்?

    Reply : 0       0

    சிறாஜ் Sunday, 01 April 2012 04:36 AM

    க.அ. வின் புகைப்படம் எதுக்கு புகைப்படம் இல்லையேல் அபிவிருத்தி இல்லை. அந்த மாபெரும் தலைவரின் பாசறையில் அவர் காட்டிய பாராளுமன்றத்தில் அவர் கொடுத்த பாராளுமன்ற ஆசனம் அவரை நீக்க எடுக்கும் முடிவு இது நியாயமா? மக்களே சொல்லுங்கள். உப்பிட்டவரை உள்ளளவும் நினை. நினைக்கத்தான் விருப்பம் இல்லை என்றால் சத்தம் இன்றி தள்ளி நில்லுப்பா. ஏன் இந்த கொல வெறியின் வெளிப்பாடு.

    Reply : 0       0

    சிறாஜ் Sunday, 01 April 2012 04:47 AM

    அபிவிருத்தி குழுவின் தலைவர் யார் என்று சட்ட ரீதியாக இன்னும் அறிவிக்கப்பட வில்லை என்று பிரதேசசபை தவிசாளர் உட்பட அனைவரும் கூறுகின்றனர் அப்படி நியமிக்கப்பட்டிருந்தால் அவர் யார் ஏன் இன்னும் கூறவில்லை என்பதனை அறிய விரும்புகிறேன்.
    முஸ்லீம் காங்கிரஸ் கோட்டைக்குள் அதாவுல்லாஹ்க்கு என்ன வேலை

    Reply : 0       0

    meenavan Sunday, 01 April 2012 05:26 AM

    நிமர்ந்து நில்லுங்கள். குறுக்களான நிழல் உங்களை எதுவும் செய்யாது, யார் குற்றினாலும் அரிசியை பெற்று மக்களுக்கு சேவை செய்யுங்கள்.

    Reply : 0       0

    mubarak Sunday, 01 April 2012 06:56 PM

    அரசாங்கத்துடன் புதிதாக வந்து ஒட்டிக்கொண்டவர்கள் அளவுக்கு மீறக்கூடாது.

    Reply : 0       0

    Saleem Sunday, 01 April 2012 07:04 PM

    யார பேர்ல யார்ர chicken அறுக்க .......?

    Reply : 0       0

    sulpikar Sunday, 01 April 2012 07:25 PM

    aslam அய்யா நீங்கள் வழமைபோல் அவசரப்பட்டு விட்டீர்கள். தவிக்க நேரிடலாம். தயாராக இருங்கள். இளம் கண்டு பயமறியாது என்பதை நிருபித்து விட்டீர்கள். வாழ்க உங்கள் பணி.

    Reply : 0       0

    nanpan.. Sunday, 01 April 2012 07:41 PM

    தலைவர் அஸ்ரபின் காலத்தில் நடைபெற்ற அபிவிருத்திகளில் ( கட்டிடம்) எதிலும் அவருடைய பெயர் பொறிக்கப்படவில்லை.

    Reply : 0       0

    abdul Sunday, 01 April 2012 10:02 PM

    தம்பி சிராஜ் பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவர் யார் என்று மாவட்டத்தில் உள்ள சகல அமைச்சர்கள் எம்பிகள் தவிசாளர்கள் அரசியல்வாதிகள் எல்லோருக்கும் தெரியும் ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் தம்பிமார் தொடர்ந்தும் வீராப்பு பேசி அபிவிருத்திகளை தடுப்பதில் வல்லவர்கள். இதுதான் முஸ்லிம் காங்கிரசின் அரசியல் சாணாக்கியம். இதுவும் மக்களுக்கும் தெரியும். ஆனால் தம்பி சிராஜிக்கு தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டுக் கொள்வது சிறப்பு.

    Reply : 0       0

    KS Monday, 02 April 2012 04:08 AM

    ஏன் ஐயா இந்த வரட்டு கவ்ரவம்? ஒலுவில் பல்கலைகழகதிற்க்கு அருகில் செல்லும் கிரவல் வீதி புனரமைக்கபட்டு அங்கு பிரதான வீதியோரமாக வைக்கபட்டுள்ள பதாகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீமினதும், அமைச்சர் அதாவுல்லாவினதும், தவிசாளர் நசீர் னதும் படங்களையும் ஒன்றாக சேர்த்து தானே காட்சிப்படுத்தியுள்ளார்கள்..

    Reply : 0       0

    sana Wednesday, 04 April 2012 01:39 PM

    ithu athullah ministera othukeedu antra thambimaare neenga solrathu ok.. Sari akkaraipattula hakeem photo potta eaatukolvingala.. Summa vakalathu vaangathiga...

    Reply : 0       0

    avathaani Sunday, 08 April 2012 01:52 PM

    அசலம். அரசியல் பொல்லாதது . அவசரபடாமல் நகர்த்துங்கள் . அனுபவம் காணாது.காலை வாரி விடுவார்கள். சுயநலவாதிகள் அதிகம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .