2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சர்வமதப் பிரதிநிதிகளுக்கான கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 02 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சமாதானத்துக்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் அம்பாறை மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் சர்வமதப் பிரதிநிதிகளுக்கான கருத்தரங்கு நேற்று சனிக்கிழமை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.

சமாதானத்துக்கான சமயங்களின் இலங்கைப் பேரவையின் அம்பாறை மாவட்டக் கிளையின் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் தலைமையில் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் முன்னாள் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.இராமகிறிஷ;ணன், கல்முனை விகாரையின் விகாராதிபதி வண. சங்கரத்தின தேரர், கல்முனை கோட்டக் கல்விப்பணிப்பாளர் மௌலவி இஷட்.எம்.நதீர், சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான வீ.ரி.சஹாதேவராஜா, சிவசிறி சண்முக மகேஷ்வரக் குருக்கள், வண. போதகர் ஜேசுதாசன் உட்பட சர்வமதப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .