2025 ஜூன் 26, வியாழக்கிழமை

மான்தோல் விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 02 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தின் நாமல்ஓயா பிரதேசத்தில் மான்தோல்கள், மான்கொம்பு ஆகியவற்றை விற்பனை செய்தபோது இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன், அவரிடமிருந்த  மான்தோல்கள், மான்கொம்பு ஆகியனவும் மீட்கப்பட்டன.

விசேட புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்கு  இது தொடர்பில் தகவல் கிடைத்ததாகவும் இதனைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை  அங்கு சென்ற பொலிஸார் குறித்த இளைஞரை கைதுசெய்ததாகவும் அம்பாறை விசேட புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்

குறித்த இளைஞர் தனது வீட்டில் வைத்து ஒருவருக்கு  மான்தோல்கள்;, மான்கொம்பை விற்பனை செய்துகொண்டிருந்தபோதே கைதுசெய்யப்பட்டதாகவும் கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞர் அம்பாறை நகரப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அம்பாறை விசேட புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .