2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வைத்திய சிகிச்சை முகாம்

Kogilavani   / 2012 ஏப்ரல் 09 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அட்டாளைச்சேனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையுடன், ஆலங்குளம் ஆயுர்வேத மத்திய மருந்தகம் இணைந்து நடத்திய வைத்திய சிகிச்சை முகாமொன்று தீகவாபி பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

புதுவருட பிறப்பினை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த வைத்திய சிகிச்சை முகாமினை கிழக்கு மாகாண சதேச வைத்தியத்துறைத் திணைக்கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

மேற்படி வைத்திய முகாமின் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்த முகாமில் வைத்தியர் எம்.நபீல், வைத்தியர் ஐ.எல். அப்துல்ஹை உள்ளிட்ட 10 இற்கும் மேற்பட்ட  வைத்தியர்கள் கலந்து கொண்டு சிசிச்சை வழங்கினர்.

தீகவாபி பிரதேசத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இவ் வைத்திய முகாமில் கலந்து கொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .