2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மூவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 25 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை மாவட்டத்தின் மத்தியமுகாம் பிரதேசத்தில் நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்ட  3 பேர்  நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக மத்தியமுகாம் பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பிரதேசத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். 

கடந்தகாலத்தில் பல்வேறு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாது தலைமறைவாகியிருந்த நிலையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஒரு வாரகாலத்தில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மத்தியமுகாம் பொலிஸார் குறிப்பிட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .