2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிப்பது என அக்கரைப்பற்றில் தீர்மானம்

Super User   / 2012 ஜூலை 30 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


கிழக்கு மாகாண சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கரைப்பற்று வாழ் மக்கள் ஆதரிப்பது என அக்கரைப்பற்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மாநாடொன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"அக்கரைப்பற்றிலுள்ள பல பொது அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் ஏற்பாட்டிலான பொது மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை இப்தார் நிகழ்வுடன் அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் இடம்பெற்றது.

இந்த மாநாட்டில் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளேனம், அக்கரைப்பற்று ஜம்இய்யதுல் உலமா சபை, அக்கரைப்பற்றிலுள்ள பள்ளிவாசல்களின் முக்கிஸ்தர்கள், விவசாய அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பின்வரும் நான்கு தீர்மானங்கள் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவையாவன:

1.    கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்திற்கு அக்கரைப்பற்று வாழ் மக்கள் வாக்களித்தல்
2.    அத்துடன் இத்தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும் அக்கரைப்பற்று வாழ் மக்கள் ஆதரித்தல்
3.    வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பிற்கான சதி முயற்சியை தோற்கடித்தல்
4.    மன்னாரில் முஸ்லிம்களை மீளக்குடியேற்ற வலியுறுத்தல்.

இந்த மாநாட்டில் தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார். இந்நிகழ்வில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட அக்கரைப்பற்று வாழ் மக்கள் கலந்துகொண்டனர்" என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.





You May Also Like

  Comments - 0

  • junaid Monday, 30 July 2012 01:18 PM

    வாழ்க அதா வளர்க்க தேசிய காங்கிரஸ்.

    Reply : 0       0

    ahamed Monday, 30 July 2012 06:15 PM

    நல்ல முடிவு அக்கரப்பத்து மக்கள் என்றும் நன்றி உடையவர்கள். அவர்களுக்குரிய பிரதினிதித்துவத்தை அவர்கள் எதற்காக வேண்டியும் இழக்க மாட்டார்கள்.அமைச்சர் செய்த சேவைகளை என்றும் அக்கரப்பத்து மக்கள் மறக்க மாட்டார்கள்.

    Reply : 0       0

    mohamed Tuesday, 31 July 2012 04:36 AM

    நல்ல விடயம். ஆனால் தனி நபரின் விருப்புக்கு மாறாக பள்ளிவாயல்கள் ஒரு முடிவைத்திணிக்கலாமா? வாக்களிப்பு ஜனநாயகத்துக்கெதிராக எந்த அமைப்பும் ஆதிக்கம் செலுத்தமுடியாது. என்னுடய வாக்கு யாருக்கு போக வேண்டும் என தீர்மானிப்பது பள்ளிவாயல்கள் அல்ல.அங்கிருக்கும் நிர்வாகம் வானத்தில் இருந்து இறங்கியதல்ல.

    Reply : 0       0

    S.Sinasudeen Saturday, 04 August 2012 05:26 AM

    நல்ல விடயம் . ஆனால் தனி நபரின் விருப்புக்கு மாறாக பள்ளிவாயல்கள் ஒரு முடிவைத் திணிக்கலாமா? வாக்களிப்பு ஜனநாயகத்துக்கெதிராக எந்த அமைப்பும் ஆதிக்கம் செலுத்தமுடியாது. என்னுடய வாக்கு யாருக்கு போக வேண்டும் என தீர்மானிப்பது பள்ளிவாயல்கள் அல்ல. அங்கிருக்கும் நிர்வாகம் வானத்தில் இருந்து இறங்கியதல்ல.

    Reply : 0       0

    Jsu Saturday, 04 August 2012 01:18 PM

    அங்கு கூடியவர்கள் மட்டும் தான் அக்கரைப்பற்று வாழ் மக்கள் என்றால் தீர்மானம் சரி. ஆனால் அங்கு வராதவர்கள் சார்பாக முடிவெடுக்க இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார். பாவம்.

    Reply : 0       0

    mama Tuesday, 07 August 2012 06:03 AM

    அக்கரைப்பற்று வாழ் மக்கள் என்றால் அதா

    Reply : 0       0

    safeer ali Monday, 13 August 2012 07:08 PM

    மண்ணால் செய்யப்பட்ட குதிரைய அக்கரைபற்றில் மட்டும் தான் சவாரி நடக்கும்.

    Reply : 0       0

    S.Sinasudeen Sunday, 02 September 2012 08:07 AM

    அங்கு கூடியவர்கள் மட்டும் தான் அக்கரைப்பற்று வாழ் மக்கள் என்றால் தீர்மானம் சரி. ஆனால் அங்கு வராதவர்கள் சார்பாக முடிவெடுக்க இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார். பாவம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .